|
|||||
தூதரகத்தை விட்டு வெளியேறினார் நசீத் ! |
|||||
இந்திய தூதரகத்தில் கடந்த பதினோரு நாட்களாக தஞ்சம் அடைந்திருந்த மாலத்தீவு முன்னாள்
அதிபர் நசீத் நேற்று மாலை வீடு திரும்பினார். நசீத் அதிபராக இருந்த போது நீதிபதி ஒருவரை கைது
செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த வருடம் போலீசார் அதிபர் நசீத்க்கு எதிராக புரட்சியில்
ஈடுபட்டனர். இதனால் கடந்த பிப்ரவரி மாதம், நஷீத் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது வழக்குப்
பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர், ஜாமினில் வெளிவந்தார்.
இதற்கிடையே, இந்திய பயணம் மேற்கொண்ட நஷீத் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி, கோர்ட்டில்
ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராக தவறியதற்காக, நீதிமன்றம் அவருக்கு
கைது வாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவர் கைதாவதை தவிர்க்க, மாலேயில் உள்ள இந்திய
தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதனால் இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான
உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 20 க்குள் நசீத்தை கைது செய்து ஆஜர் படுத்துமாறு மாலத்தீவு
நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்தியா மற்றும் மாலத்தீவு அதிகாரிகள் பேச்சு வார்த்தை
நடத்தினர். இதனை அடுத்து நசீத் இந்திய தூதரகத்தை விட்டு நேற்று மாலை வெளியேறினார்.
இந்திய தூதரகத்தில் கடந்த பதினோரு நாட்களாக தஞ்சம் அடைந்திருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் நசீத் நேற்று மாலை வீடு திரும்பினார். நசீத் அதிபராக இருந்த போது நீதிபதி ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த வருடம் போலீசார் அதிபர் நசீத்க்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த பிப்ரவரி மாதம், நஷீத் அதிபர் பதவியிலிருந்து விலகினார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர், ஜாமினில் வெளிவந்தார். இதற்கிடையே, இந்திய பயணம் மேற்கொண்ட நஷீத் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி, கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராக தவறியதற்காக, நீதிமன்றம் அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவர் கைதாவதை தவிர்க்க, மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதனால் இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 20 க்குள் நசீத்தை கைது செய்து ஆஜர் படுத்துமாறு மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்தியா மற்றும் மாலத்தீவு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை அடுத்து நசீத் இந்திய தூதரகத்தை விட்டு நேற்று மாலை வெளியேறினார்.
|
|||||
Maldives ex-president leaves Indian embassy refuge | |||||
Former Maldives president Mohamed Nasheed left the Indian High Commission in Male on Saturday, 11 days after he sought refuge following an arrest warrant against him in a court case. |
|||||
by Swathi on 25 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|