மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் நேற்று கைது செய்யப்பட்டார்.மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்து, காவலில் வைக்கும் படி உத்தரவிட்டார். அதன் பிறகு நடந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து, அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார். நீதிபதியைக் கைது செய்ததை எதிர்த்து அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நஷீத்தைக் கைது செய்ய நீதிமன்றம் இரண்டு முறை வாரண்ட் பிறப்பித்தது.கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக, மாலேயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நஷீத் கடந்த மாதம் தஞ்சம் அடைந்தார். பின்னர், இந்திய அரசு மேற்கொண்ட சமரச முயற்சியைத் தொடர்ந்து, அவர் பதினோரு நாள்களுக்குப் பிறகு பிப்ரவரி 23ஆம் தேதி தூதரகத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், நஷீத்தைக் கைது செய்யுமாறு உல்ஹுமாலே மாகாண நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டைத் தொடர்ந்து, அவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நஷீத் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடுவார் என மாலத்தீவு அரசு வட்டரங்கள் தெரிவிக்கின்றன.
|