சமீபத்தில் கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று வரும் ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வரும் மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.இதுதொடர்பாக, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரை மம்தா புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் மூன்றாவது அணிக்கான அறிவிப்பு வரும் என்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கலக்கத்தில் உள்ளன.
|