LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நகை, பணத்துக்காக 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

நகை, பணத்துக்காக 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

கேரளாவில் நகை, பணத்துக்காக 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேரளாவின் பையனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜூஆன்டனி (வயது 38). வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே கல்லோடியில் வசித்து வருகிறார். வேலை எதுவும் இல்லாத இவர் திருமணம் செய்வதையே தொழிலாக கொண்டிருந்தார். 

பத்திரிகைகளில் 2வது திருமணத்துக்கு பெண் தேவை என கவர்ச்சிகரமாக விளம்பரம்  செய்வார். விளம்பரத்தில் மொபைல் எண்ணையும் குறிப்பிடுவார். இதைப் பார்த்து பல இளம்பெண்கள் தொடர்பு கொள்வார்கள். 

இப்படி தொடர்பு கொள்பவர்களில் வசதியான பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார். பின்னர் ஏதாவது இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து ஒருசில வாரம் மட்டும் அவருடன் வசிப்பார்.

பின்னர் நகை, பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுவார். அவர் திருமணம் செய்யும் பெண்ணின் பெயரில் சிம்கார்டு வாங்குவார். அந்த சிம்கார்டை பயன்படுத்தி அடுத்த பெண்ணுக்காக விளம்பரம் செய்வார். 

இவ்வாறு தொடர்ந்து பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த மும்தாஜை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

எர்ணாகுளம் வடுதலை பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கினார். ஒரு வாரம் அவருடன் தங்கிய பிறகு அவரிடம் இருந்த 15 பவுன் நகை, பணத்துடன் மாயமானார்.

இது குறித்து மும்தாஜ் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி கமிஷனர் லால்ஜி உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

பல சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்ததால் அவரைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில் பிஜூ ஆன்டனி வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் வசித்து வருவது தெரியவந்தது.

உடனே போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அவர் தற்போது கூட  மணமகள் தேவை என விளம்பரம் செய்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

பிஜூ ஆன்டனியை கைது செய்து அழைத்து வரும் வழியில் கூட அவரது செல்போனுக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து இருப்பதாகவும், ஏராளமான நகை, பணம் வாங்கி இருப்பதாகவும் கூறினார்.

இந்து பெண் தொடர்பு கொண்டால் இந்து பெயரையும், கிறிஸ்தவ பெண் என்றால் கிறிஸ்தவ பெயரையும், முஸ்லிம் பெண்கள் என்றால் முஸ்லிம் பெயரையும் கூறுவாராம். பின்னர் அந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்து நகை, பணம் உள்ள பெண்களை தேர்வு செய்து திருமணம் செய்து வந்துள்ளார். 

இவ்வாறு 25 வயது முதல் 50 வயது வரை உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

by Mani Bharathi   on 11 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.