LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

மனசு கொஞ்சம் வலிக்குது - கவிப்புயல் இனியவன்

 

பச்சை நிற உடலழகியின்...
வண்ண வண்ண பூக்கள் ....
அங்காங்கே அழகுபடுத்தும் ....
பச்சை நிற அழகியின் வதனம் ....
சுற்றும் முற்றும் பார்த்தேன் ...
தூரத்தில் யாரும் இல்லை ...
தடுப்பாரும் யாருமில்லை ....!!!
கிள்ளி எடுத்தேன் பூவை ....
தள்ளி போகமுடியாமல் ..
தன் வதனத்தை இழந்து ...
தவிர்த்த செடியின் சோகத்தை ...
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
ஆற்றங்கரைக்கு போனேன் .....
அழகான ஆற்று நீரில் கால் ....
பதித்தேன் தட்டி சென்றது மீன் ...
கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு ....
ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!!
என்னை மறந்தேன் -தூண்டிலில் ...
புழுவை செருகி துடிக்க துடிக்க ....
மீன் ஒன்றை பிடித்தேன் ....
இரண்டு உயிரை கொன்று ...
அன்று இன்பமடைந்தேன் .....
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
புல்வெளிக்கு விளையாட சென்றேன்.....
வண்ணமாய் பட்டாம் பூச்சிகள் ...
மனசு பட்டாம் பூச்சியாய் பறக்கவே .....
ஒரு பட்டாம் பூச்சியை பிடிக்க மனசு ....
படபடத்தது கலைத்து களைத்து ....
போராட்டத்தின் மத்தியில் பிடித்தேன்..!!!
அதன் மென்மை இறகு ...
சற்று கிழிந்தது பறக்க முடியாமல் ...
துடித்தது - பட்டாம் பூச்சியை பிடித்து ...
இன்பம் கண்ட அன்றைய இன்பத்தை ....
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
தோட்டத்துக்கு புல்பிடுங்க சென்றேன் ....
துள்ளி துள்ளி குதித்து கன்றுகுட்டியை ....
தோட்டப்பயிரை நாசமாக்குது ....
பிடித்து கட்டு மகனே என்ற கட்டளைக்கு ....
உடனே அதை பிடித்து கட்டினேன் ....!!!
கட்டியவுடன் தூரத்தில் நின்ற தன்....
தாயை " அம்மா" என்றழைத்ததை ....
என்னை விளையாட விடுகிறார்கள் ....
இல்லையென்பதுபோல் கத்திய சத்தம் ...
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
அடம்பிடித்து கிளிக்கூடு வாங்கி ....
இரவுநேரம் தென்னம் பொந்துக்குள் ....
திருட்டுத்தனமாய் தாயிடம் இருந்து ...
குஞ்சை பறித்து கூட்டில் அடைத்து ....
பழமூட்டி எண்ணைதடவி கண்ட ...
இன்பத்தை இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
- கவிப்புயல் இனியவன் 

பச்சை நிற உடலழகியின்...

வண்ண வண்ண பூக்கள் ....

அங்காங்கே அழகுபடுத்தும் ....

பச்சை நிற அழகியின் வதனம் ....

சுற்றும் முற்றும் பார்த்தேன் ...

தூரத்தில் யாரும் இல்லை ...

தடுப்பாரும் யாருமில்லை ....!!!


கிள்ளி எடுத்தேன் பூவை ....

தள்ளி போகமுடியாமல் ..

தன் வதனத்தை இழந்து ...

தவிர்த்த செடியின் சோகத்தை ...

இப்போ நினைத்தால் .....

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!


ஆற்றங்கரைக்கு போனேன் .....

அழகான ஆற்று நீரில் கால் ....

பதித்தேன் தட்டி சென்றது மீன் ...

கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு ....

ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!!


என்னை மறந்தேன் -தூண்டிலில் ...

புழுவை செருகி துடிக்க துடிக்க ....

மீன் ஒன்றை பிடித்தேன் ....

இரண்டு உயிரை கொன்று ...

அன்று இன்பமடைந்தேன் .....

இப்போ நினைத்தால் .....

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!


புல்வெளிக்கு விளையாட சென்றேன்.....

வண்ணமாய் பட்டாம் பூச்சிகள் ...

மனசு பட்டாம் பூச்சியாய் பறக்கவே .....

ஒரு பட்டாம் பூச்சியை பிடிக்க மனசு ....

படபடத்தது கலைத்து களைத்து ....

போராட்டத்தின் மத்தியில் பிடித்தேன்..!!!


அதன் மென்மை இறகு ...

சற்று கிழிந்தது பறக்க முடியாமல் ...

துடித்தது - பட்டாம் பூச்சியை பிடித்து ...

இன்பம் கண்ட அன்றைய இன்பத்தை ....

இப்போ நினைத்தால் .....

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!


தோட்டத்துக்கு புல்பிடுங்க சென்றேன் ....

துள்ளி துள்ளி குதித்து கன்றுகுட்டியை ....

தோட்டப்பயிரை நாசமாக்குது ....

பிடித்து கட்டு மகனே என்ற கட்டளைக்கு ....

உடனே அதை பிடித்து கட்டினேன் ....!!!


கட்டியவுடன் தூரத்தில் நின்ற தன்....

தாயை " அம்மா" என்றழைத்ததை ....

என்னை விளையாட விடுகிறார்கள் ....

இல்லையென்பதுபோல் கத்திய சத்தம் ...

இப்போ நினைத்தால் .....

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!


அடம்பிடித்து கிளிக்கூடு வாங்கி ....

இரவுநேரம் தென்னம் பொந்துக்குள் ....

திருட்டுத்தனமாய் தாயிடம் இருந்து ...

குஞ்சை பறித்து கூட்டில் அடைத்து ....

பழமூட்டி எண்ணைதடவி கண்ட ...

இன்பத்தை இப்போ நினைத்தால் .....

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!


- கவிப்புயல் இனியவன் 

by Swathi   on 14 Mar 2016  0 Comments
Tags: மனசு   Manasu                 
 தொடர்புடையவை-Related Articles
மனசு கொஞ்சம் வலிக்குது - கவிப்புயல் இனியவன் மனசு கொஞ்சம் வலிக்குது - கவிப்புயல் இனியவன்
இப்படியும் அழுகிறது மனசு..  - வித்யாசாகர்! இப்படியும் அழுகிறது மனசு.. - வித்யாசாகர்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.