|
|||||
ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றும் ரோபோ - மதுரை ஆசிரியரின் கண்டுபிடிப்பு !! |
|||||
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் அதிசய ரோபோ. இந்த ரோபோவை உருவாக்கியவர் மதுரையை சேர்ந்த மணிகண்டன். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராமல் விழுந்துவிடும் குழந்தைகளுக்கு இவர் கடவுளாக தெரிகிறார்.
தனது கண்டுபிடிப்பு பற்றி மணிகண்டன் கூறுகையில், போர்வெல் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும், அதை காப்பாற்ற நடைபெற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவதையும், செய்திகளில் அடிக்கடி பார்த்தேன். எனவே குழந்தைகளை காப்பாற்ற ஏதாவது ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாதா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தின் விளைவாக உருவானதுதான் குட்டி ரோபோ.
முதலில் உருவாக்கிய ரோபோவில், கைகள் போன்ற பகுதியை உருவாக்கி மேலும் மெருகேற்றினேன். அதன்பிறகு அதாவது 2004-2012ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், ரோபோவில் ஹைடெக் வசதிகளை ஏற்படுத்தினேன். ஆடியோ, வீடியோ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 12 வோல்ட் பேட்டரியில் இதன் காமிரா, மைக் இயங்கும். இதில் நவீன வசதிகளும் உள்ளன இரவிலும் படம் பிடிக்கும் வகையிலான கேமராவுடன், குட்டி டிவியும் இணைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். கருவியுடன் இணைக்கப்பட்ட கயிறு, எத்தகைய ஆழத்திற்கும் செலுத்தும் அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு இதுபோன்ற ரோபோ கருவிகளை அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வைக்க வேண்டும் என்பது மணிகண்டன் விருப்பமாக உள்ளது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்டுக்கொடுத்தது இவரது ரோபோதான். கிணற்றில் குழந்தைகள் விழுந்தவுடன் மணிகண்டனுக்கு தகவல் அளித்தால் குழந்தைகளின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றும் ரோபோ - மதுரை ஆசிரியரின் கண்டுபிடிப்பு !!
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் அதிசய ரோபோ. இந்த ரோபோவை உருவாக்கியவர் மதுரையை சேர்ந்த மணிகண்டன். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராமல் விழுந்துவிடும் குழந்தைகளுக்கு இவர் ஆபத்பாண்டவராக தெரிகிறார். இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், போர்வெல் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும், அதை காப்பாற்ற நடைபெற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவதையும், செய்திகளில் அடிக்கடி பார்த்தேன். எனவே குழந்தைகளை காப்பாற்ற ஏதாவது ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாதா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தின் விளைவாக உருவானதுதான் குட்டி ரோபோ. முதலில் உருவாக்கிய ரோபோவில், கைகள் போன்ற பகுதியை உருவாக்கி மேலும் மெருகேற்றினேன். அதன்பிறகு அதாவது 2004-2012ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், ரோபோவில் ஹைடெக் வசதிகளை ஏற்படுத்தினேன். ஆடியோ, வீடியோ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 12 வோல்ட் பேட்டரியில் இதன் காமிரா, மைக் இயங்கும். இதில் நவீன வசதிகளும் உள்ளன இரவிலும் படம் பிடிக்கும் வகையிலான கேமராவுடன், குட்டி டிவியும் இணைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். கருவியுடன் இணைக்கப்பட்ட கயிறு, எத்தகைய ஆழத்திற்கும் செலுத்தும் அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு இதுபோன்ற ரோபோ கருவிகளை அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வைக்க வேண்டும் என்பது மணிகண்டன் விருப்பமாக உள்ளது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்டுக்கொடுத்தது இவரது ரோபோதான். கிணற்றில் குழந்தைகள் விழுந்தவுடன் மணிகண்டனுக்கு தகவல் அளித்தால் குழந்தைகளின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
|
|||||
by Swathi on 25 Jun 2014 10 Comments | |||||
Tags: Manikandan Madurai Manikandan Discovery Latest Robotic Invention ரோபோ கண்டுபிடிப்பு மணிகண்டன் மதுர | |||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|