மணிமேகலை வெண்பா - பகுதி 1
பொன்னிவிழாப் பறை முழக்கம்
பொன்னி விழாநாளும் போந்த தெனவேந்தன் உன்னி விழாச்செய்தி ஊரெல்லாம்-பன்னிப் பறையானை அன்றே பறையறையச் சொன்னான் இறையானை சென்ற தினிது. |
நகரை உள்ளும் புறமும் புதுக்குக
அரசறைந்தான் அவ்வாறே ஆங்காங்கு நாட்டில் முரசறைந்தான் "முந்து புகழ்சேர்-பெருமக்கள் உள்ளும் புறமும் புதுக்கநகர்! நெஞ்சத்தை அள்ளும்கா வேரிவிழா அன்று." |
5 |
நகரின் அழகமைப்பு
இதுமணலோ செம்பொற் பொடிதானோ என்னப் புதுமணல் ஓவம் புரிந்த-முதுநகரில் பட்டுக் கொடியும் பறக்கும்நறுந் தொங்கலிலே மட்டுக் கொடியும்மலர்க் காம்பு |
10 |
தோரணமும் விளக்கும்
சிலந்திஎங்கும் என்னத் தெருத்தோற்ம் மேற்பால் கலந்தியங்கும் தோரணங்கள் காற்றால்-புலந்தியங்கப் பண்ணும்முன் வீடெல்லாம்! பாழிரவில் நற்பகலைப் பண்ணுமே பாவை விளக்கு. |
15
|
தெருப் பச்சைப் பந்தல்கள்
முன்றில் ஓவ் வொன்றுமே பன்மணியால் மூடுற்றே ஒன்றில்ஒவ் வொன்றும் ஒளிமிகுக்கும்-நன்றே இருப்பச்சை இல்லாப் பெருந்தேராய்த் தோன்றும் தெருப்பச்சைப் பந்தல்கள் சேர்ந்து. |
20 |
தெரு இருபாலும் பூச்செடிகள்
சாடிப் பலவண்ணப் பூச்செடிகள் பன்மணியைச் சாடித் தளிர்த்துத் தெருவெல்லாம்-நாடியே பண்டழைக்க வண்டினத்தைப் பாடுங்கள் என்றுதேன் கொண்டழைத்துக் கொண்டிருக்கும் அங்கு. |
ஆடல் பாடல்
தெருமுடிவில் ஆடலும் பாடலும் கொள்வார் திருமுடிவில் வேந்தன் திறலே-ஒருமுடிவில் சீர்வாழ்த்தி மன்றப் புலவரெல்லாம் செந்தமிழின் பேர்வாழ்த்த நிற்பார் பெரிது. |
25 |
குழந்தைகள் தமிழ் பாடல்
மைச்சிட்டுப் பாடும் மருங்கில் அதன்ஒலியை அச்சிட்டுக் காற்சிலம்பு பாடவே-தச்சிட்ட பாவை அசைந்தாடும் பாங்கில் குழந்தைதமிழ் நாவை அசைத்தாடும் நன்கு. |
30 |
தமிழ் மலரும் மன்றங்கள்
அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின் திறம்பொருள் இன்னவெனத் தேர-உறங்கும் சிலரும் விழிக்கத் தமிழின் சிறப்பு மலரும் புலவர்தம் மன்று. |
35 |
காவேரி சென்று ஆடினார்கள்
காற்றினிலே ஆடை பறக்கப்போய்க் காவேரி ஆற்றி னிலாமுகத்தார் ஆடுவார்-நேற்றிரா உண்டஇதழ் கொம்புத்தேன் காதலர்கள் அந்நேரம் கண்டஇதழ் மாணிக்கக் காடு. |
40 |
மக்கள் நெருக்கம்
நீராடி மீளும் நெடுந்தேர் பரிதாண்டி நேராடப் போவார் நெருக்கடைவார்-ஆரிழையார் பின்னடக்க மாச்செல்வர் பீடுமலர்க் கைப்பற்றி முன்னடக்க மாச்செல்வர் மொய்த்து. |
அரசுக்கு வாழ்த்து
வாழிய சோழமன்மா வண்கிள்ளி செங்கோலே வாழிய சோழன் வரிப்புலிநீ-டுழி எனப்பாவை யார்வந்தால் பாடினார் கூத்த ரினப்பாவை யார்ஆடி னார். |
45 |
அரசவையில் அவள் ஏன் இல்லை?
போதவிழும் கூந்தலார் போந்தாடும் போதெல்லாம் மாதவியும் மேகலையும் வாராரோ-ஏதவர்க்கு நேர்ந்ததென் றார்சில்லோர் நேர்மைஇது வோஎன்றார் சேர்ந்ததிது தாயின் செவி. |
50 |
மாதவியின் தாய் 'மாதவியையும் மணிமேகலையையும் அழைத்துவா' என்று பாங்கிக்குக் கூறினாள்
பிழைஎன்றாள் மாதவிதாய் பெண்பேர்த்தி மாரை அழைஎன்றாள் மன்றத்தில் ஆட- உழையிருந்த பாங்கி நடந்தாள் அப் பச்சைமயில் அச்சவிடை |
55 |
மாதவியிடம் பாங்கி உரைத்தாள்
ஆங்கிருந்த மாதவியை அன்பால் அணுகியே 'நீங்கா உமதுகடன் நீங்கிற்றோ-ஊங்காட ஏன்மறந்தீர் ஏற்ற கலைவல்லீர்? மாமதிதான் வான்மறக்கு மோ?' என்றாள் மாது. |
60 |
மாதவி¢ பாங்கியிடம் கூறுகின்றாள்
காவலனைக் காற்சிலம்பால் வென்று கொலையுண்ட கோவலன் கொண்டகுடிப் பேர்காத்த-பாவை தரத்தைஆய் வாளாதன் தாமரைபோற் கண்ணாள் பரத்தைஆய் வாழ்வாளா பார். |
மணிமேகலை அவைக்கு வரமாட்டாள் என்கின்றாள் மாதவி
இன்பமெனல் நற்றவத்தால் எய்துவதாம் மற்றுள்ள துன்பமெனல் இவ்வுலகில் தோய்வவாம்-என்பதவள் எண்ணம்மணி மேகலைதான் ஏகாள் அவை; இஃது திண்ணம்எனச் செப்பினாள் தாய். |
65 |
அறவண அடிகளிடம் மாதவி சொன்னாளாம்
அல்லலுற்றேன் காதலனின் கண்ணகியின் அல்லலெல்லாம் சொல்லலுற்றேன் வந்திங்கே; தூய்நெறியே-செல்லலுற்ற அண்ணல் அடிகள் அறவணர்பால்! நான் அதன்மேல் நண்ணல் நவின்றார் அவர். |
70 |
அறவணர் சொல்லியது
எப்பொருட்கும் ஆட்படுதல் இன்றி இடரற்ற மெய்ப்பொருள் ஆதல் விடுதலை-அப்பொருளின் பற்றுக்குப் பற்றுவிட வேண்டுமென்றார் மற்றஎலாம் எற்றுக்கென் றாள்மா தவி! |
75 |
மாதவி ஆயத்தார்க்கும் அன்னைக்கும் சேதி அறிவித்தாள்
அம்மைக்கே ஆயத்தி னோர்க்கே அறிவி என்று செம்மைக்கே ஆயத்தி செப்பினாள்-கைம்மேல் இருந்த மணியே இழந்தவள்பொல் நெஞ்சம் வருந்த நடந்தாள்அம் மாது. |
80 |
ஆங்கு ஒரு புறம் பூத்தொடுக்கும் மணிமேகலை நிலை
கோவலனின் மாதவியின் அன்பின் கொடை! அழகை மேவலரும் போற்றுமணி மேகலைதான்-ஆவலுடன் பாத்தொடுத்துக் கொண்டிருப்பார் போலுமொரு பாலிருந்து பூத்தொடுத்துக் கொண்டிருï¢î£ள் ஆங்கு. |
மணிமேகலை பூத்தொடுக்கும் திறம்
பன்மலர்க்காம் பொவ்வொன்றும் பச்சைமயில் மேகலைதான் மென்மôர்க்கைக் காந்தள் விரல்பற்றித்-தன்மலர்க்கண் கூறுமுறை கோணாமல் கட்டுந்தார் õண்ணத்தை நூறுமுறை நோக்கல் தகும். |
5 |
மாதவி பாங்கியிடம் கூறிய வர£று மணிமேகலையை வருத்தியது
ஆங்கிருந்த மாதவிதன் ஆளன்மனை யாளிடரைப் பாங்கிருந்த பாங்கிக்குக் கூறியதைக்-கோங்கிருந்த வண்டார் குழலி மணிமே கலைசெவியால் மொண்டாள் முறிந்தாள்தன் நெஞ்சு. |
10 |
மணிமேகலை கட்டிய மாலை கண்ணீரில் மிதந்தது
காவலன்தன் காவல் பிழைத்தது¾ம் கண்ணகியும் கோவலனும் மாண்டதுவும் கூறியதைப்-பாவை நினைப்பாள் நிலைதளர்வாள் கண்ணீரை ஊற்றி நனைப்பாள் நறுமலர்த்தா ரை. |
15 |
மாதவி அறிந்தாள்
கரும்பிருக்கும் சொல்லும் கனியுதட்டின் ஓரம் அரும்பிருக்கும் அஞ்சிரிப்பும் எங்கே?-திரும்பித்தாய் பெண்கண்டாள் பெண்தொடுக்கும் மாலைமிதக் கக்கண்டாள் கண்கண்டாள் கண்ணீர்கண் டாள். |
20 |
வேறு மலர் வேண்டினாள் தாய்
ஆறொன்று கண்ணீர் அலங்கலைத்தீ தாக்கியதால் வேறொன்று காணமலர் வேண்டென்று-வீறொன்று நெஞ்சினாள் மாதவிதான் நேர்ந்த துயர்மாற்றக் கெஞ்சினாள் கேட்டாள் கிளி . |
மணிமேகலை வெளியிற் செல்லுவதைப் பாங்கி எதிர்த்தாள்
ஈதுரைக்கக் கேட்ட எழிற்பாங்கி அன்னையீர் ஏதுரைக்க லானீர் இதோஇந்த-மாதுரைக்கின் மையேந்து கண்ணாய் மயல்தீர்க்க வேண்டுமென்று கையேந்தும் கண்டால் உலகு. |
25 |
மேலும் பாங்கி கூறுகின்றாள்
போது பறிக்கஎங்கும் போகவிì£ தீர்அழகு மாது பறிக்கஎங்கும் மாநிலத்தின்-மீது விழிதிறந்து வாழ்கின்றார் வேந்தர் அழிவுக்கு வழிதிறந்து வாழ்வோமோ நாம். |
30 |
உதய குமரனால் கேடு வரக்கூடும்
எவ்வனமே சென்றாலும் ஏந்தலின் தோன்றலுக்குச் செவ்வனமே செப்பப் பலருள்ளார்-இவ்வனம் மல்லல் உவவனம்! மங்கையுடன் நானுமே செல்லவெனிற் செல்வேன்என் றாள். |
35 |
தாய் ஒப்புக்கொண்டதால் இருவரும் எழுந்தார்கள்
தன்னில் எழுந்த தமிழ்ப்பாட்டும் சொல்மாற்றிப் பின்னி எழுந்த பிழைப்பாட்டும்-என்ன ஒருமணி மேகலையும் பாங்கியும் ஆன இருமணியும் சென்றார் âழுந்து. |
40 |
மணிமேகலையும் சுதமதியும் காட்சிக்கு மகிழ்வார் மனம் கவிöõ¢õó¢
கூட்டுக் கிளிகள் இருக்கை குறையாக்கிக் காட்டு மயிலாகிக் கால்வைத்த-பாட்டையெலாம் ஒவ்வொன்றும் காண்பார் வியப்பார் உருகுவார் எவ்வொன்றும் ஈடு படார். |
ஒரு களி உண்ணா நோன்பியைக் கள்குடிக்க அழைக்கின்றான்
பண்ணாத நல்ல சுவைநீர் பருகிடலாம் உண்ணாத நோன்பிகளும் உண்ணிலொன்றும்-பண்ணாதென் றுள்ளுக் கழைத்தான் ஒருகளி! நோன்பிகண்டான் கள்ளுக் கடைஎன்ற பேர். |
45 |
பெருங்களி இயல்பு
மறுகு படுபிணத்தின் காதில் மகிணன் அறுகு செலுத்த அவனைக்-குÁகினான் கட்குடித்தேன் ஓய்வெடுத்தேன் என்றான்ஏன் ஓய்வென்னக் கட்குடிக்கத் தான் என்றான் காய்ந்து. |
50 |
வையம் துன்பம் நிறைந்தது
வைய நடைமுறையில் துன்பமே வாய்ப்பதன்றி உய்யுமா றில்லைஎன உரைத்துத்-துய்ய மணிமே கலைஅம் மறுகு நடந்தாள் அணிமேவும் அப்பாங்கி யோடு. |
55 |
எங்கும் குறைபாடு
பொன்னைக் குவித்துவைத்தோன் பொங்கலுண்ண [வாழையிலைத் தொன்னை திருடுகையில் தோதுண்டு-பின்ஒருவன் மேலாடை மேற்சென் றிழுப்பான் அவன்செருப்பைக் காலாடி னான்ஒருவன் கண்டு. |
60 |
பற்று நீங்க வேண்டும
இறைபாடென் பட்டாலும் இன்மைபோ னாலும் குறைபா டிலாமலிரா தென்று-மறைபாடும்! ñற்று விடுதலை வேண்டின் மனமே பற்று விடுதலை வேண்டு. |
உவவனம் சேர்ந்தனர் மணிமேகலையும் சுதமதியும்
என்றிளை யாளேதன் பாங்கியுடன் இங்குமங்கும் நின்றிளை யாததொரு நெஞ்சமுடன்-சென்றவளாய்க் காணா உவவனம் பாங்கிதான் காட்டிடவே பூணா வியப்புப்பூண் பாள். |
65 |
மணிமேகலை வந்தபோது அவளைக் கண்டவர்கள் என்ன ஆனார்கள்
மாது மலர்வனத்தைக் காண்பாள்! வழிநடந்த போது பலர்கண்டு பூண்ட இறும்-பூது புகல விரும்பினேன் பொன்றாத் தமிழ்விட் டகல விரும்புவார் ஆர்? |
70 |
கள்குடத்தின் உள்ளிருந்த கள்ளிலும் மணிமேகலை உருவம்
கட்கடைக்கே ஆளானார் கார்குழலைக் கண்டுகருங் கட்கடைக்கே ஆளாகக் காத்திருந்தார்-கட்குடத்தை எண்ணார்கள் எண்ணுகையில் கட்குடத்துள் கண்ணுக்குக் கண்ணாளைக் கண்டார் கவிழ்ந்து. |
75 |
மணிமேகலை துண்டு உடுத்துப் போகும்படி செய்தவர் யார்?
பண்டுடுத்தும் பட்டில்லை பல்லிழைகள் இல்லைஇவள் துண்டுடுத்துப் போகின்றாள் தொல்லுலகு-கண்டெ´த்த தங்கப் படிவம் தவத்துக் குடன்பட்டாள் இங்கிப் படிச்செய்தார் யார்? |
80 |
மணிமேகலை கண்டாலே தித்திக்கும் தேன்
குன்றத்துக் கொம்புத்தேன் முல்லைவா ழைப்பழத்தேன் மன்றத்து மாப்புலவர் செந்தமிழ்த்தேன்-என்றமுத்தேன் உண்டாலே தேன்! இம் மணிமே கலைஒருத்தி கண்டாலே தித்திக்கும் தேன். |
வைய விளக்கை யாருக்குமில்லாமல் ஆக்கினரே
தையலை இவ்வாறு தவக்குழியில் தள்ளுவதோ? வைய விளக்கை மருக்கெழுந்தை-ஐயையோ ஆருக்கு மில்லாமல் ஆக்கினரே பெண்ணழகின் வேருக்கு வெந்நீரை விட்டு. |
85 |
யாழெடுத்தவன் மணிமேகலையைக் கண்டு, யாழின் மேலேயே சாய்ந்து கிடந்தான்
என்று பலரும் இயம்பி வருந்தினார் சென்று பரத்தை தெருவறைக்குள்-ஒன்றை நினைத்துயாழ் தொட்டஎட்® நேரிழையைக்கண்டே அனைத்துñ¢ மறந்திருந்தான் ஆங்கு. |
90 |
உதயகுமரன் மணிமேகலை பற்றிக் கேள்விப்படுகிறான்
அந்நேரம் தேரேறி அங்குவந்த வேந்தன்மகன் இந்நேரம் யாரால் நீ இன்னலுற்றாய்-முன்னே அதையுரைப்பாய் என்றுரைத்தான்: அன்னம் நடந்த கதையுரைப்பான் எட்டி கடிது. |
95 |
எட்டியின் இரக்கம
சின்னஞ் சிறியஇடைச் செல்விமணி மேகலையாம் அன்னம் அழகு சுமந்தகன்றாள்-முன்னமெல்லாம் பட்டுடுத்தும் பான்மையினாள் இன்று தருநெறிக்குட் பட்டுடுத்தும் பான்மையினாள் ஆய், |
100 |
மணிமேகலையைப் பார்த்தேன்; கோவலன் வரலாறு நினைவுக்கு வந்ததும் யாழில் சாய்ந்தேன்
அன்னாளைக் கண்டேன் அவள்தந்தை கோவலனின் முன்னாளை எண்ண முறிந்ததுள்ளம்-என்யாழில் இட்டவிரல் தீநரம்பில் இட்டதாம் என்றெட்டி பட்டதுயர் சொன்னான் பதைத்து. |
மணிமேகலையை என்தேரில் ஏற்றி வந்துவிடுவேன்
அப்படியா அன்னாளைச் சென்று மணித்தேரில் எப்படியும் ஏற்றிவந்தென் இற்சேர்ப்பேன்-அப்பொன்னை நீணாள் நினைந்தும் நெருங்காத என்வாணாள் வீணாள்என் றானிளைய வேந்து. |
105 |
உதயனின் கண்ணுக்கு வழியெல்லாம் மணிமேகலை
குளிர்காற்றுக் கூந்தல் அருவியோ! தேமாந் தளிர்மாது மேனியோ! தண்டை-ஒளிர்வண்டோ? என்பான் எதிலும் மí¤மே கலைகாண்பான்! தென்பாô¢ ïடத்தினான் தேர். |
110 |
மணிமேகலையும் பாங்கியும் இன்னும் உவவனக் காட்சியைக் கண்டு மகிழ்கின்றார்கள்
ஏடகத்துக் காட்டாத இன்பத்தை நல்லியற்கை நாடகத்தை நங்கையும் பாங்கியும்-தேடிஎப் பாலும்கண் டார்கள்! பகர்ந்து பகர்ந்துமேன் மேலும்கண் டார்கள் விழைந்து! |
115 |
மயில் தோகையில் மறைந்தது ஒரு மான்
களித்தாடும் மஞ்ஞைக் கவின்தோகை யின்பின் ஒளித்தாடும் மானை ஒருமான்-விளித்தோடி மாவடிக்குப் பின்னிருந்த மந்தியின் செவ்வலரிப் பூவடிக்குப் புண்ணாகும் நெஞ்சு. |
120 |
மாலை புனைந்து குளத்துக் கண்ணாடி பார்க்கும் ஒரு குரங்கு
விண்ணாடி மாம்பூ விரிதார் புனைகடுவன் கண்ணாடி காணும் ஒருகுளத்தின்-உண்ணாடி மாம்பழத்தைப் போடப்போம் மந்தியினை நீள்வரால் ஆம்! பழத்தைப் போடென்னும் அங்கு! |
தவளை விளைத்த குழப்பம
குவளை விழுந்த குளத்தில் எழுந்து தவù÷ தளபுளா என்ன-உவளுகின்ற கெண்டை நடுங்கும்; கிளிகுயில் வண்டெல்லாம் தொண்டை நடுங்கும் தொடர்ந்து. |
125 |
அல்லியை வெறுக்கும் பலாவைப் பாடும் வண்டு
மூடிய அல்லிக்கு மொய்க்காமல் தாமரைக்குப் பாடிய வண்டு பலாமரத்தை-நாடியதன் பேருக்கும் தன்பெரிய பிள்ளைக்கும் முள்ளுக்கும் வேருக்கும் பாடல் வியப்பு; |
130 |
முத்துக்கு முல்லைச் சிரிப்பு நிகர்!
என்றுக்கு வெண்முருக்கும் பூநிகர்! ஏழிசை மன்றுக்கு வண்டுநிகர்! வானிமிர்ந்த-கொன்றைப்பூங் கொத்துக்குப் பொற்காசின் கோவைநிகர்! முற்றுநிகர் முத்துக்கு முல்லைச் சிரிப்பு! |
135 |
நெடுந்தொலைவிலிருந்து ஓர் ஒலி!
அண்டுமலர்ச் சோலை அழகு வரிசையெல்லாம் கண்டுவரும் போதுதன் காதினிலே-நண்டு நிகர்அங்கை சேர்த்து நெடுந்தொலை ஆய்ந்து பகர்வாள்தன் பாங்கியைப் பார்த்து |
140 |
|