LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

மணிமேகலை வெண்பா - பகுதி 1

                             மணிமேகலை வெண்பா - பகுதி 1

 



நகரின் அழகமைப்பு


இதுமணலோ செம்பொற் பொடிதானோ என்னப்
புதுமணல் ஓவம் புரிந்த-முதுநகரில் 
பட்டுக் கொடியும் பறக்கும்நறுந் தொங்கலிலே
மட்டுக் கொடியும்மலர்க் காம்பு
10



தோரணமும் விளக்கும்


சிலந்திஎங்கும் என்னத் தெருத்தோற்ம் மேற்பால்
கலந்தியங்கும் தோரணங்கள் காற்றால்-புலந்தியங்கப்
பண்ணும்முன் வீடெல்லாம்! பாழிரவில் நற்பகலைப் 
பண்ணுமே பாவை விளக்கு.
15 

 



தெருப் பச்சைப் பந்தல்கள்


முன்றில் ஓவ் வொன்றுமே பன்மணியால் மூடுற்றே
ஒன்றில்ஒவ் வொன்றும் ஒளிமிகுக்கும்-நன்றே
இருப்பச்சை இல்லாப் பெருந்தேராய்த் தோன்றும்
தெருப்பச்சைப் பந்தல்கள் சேர்ந்து.
20



தெரு இருபாலும் பூச்செடிகள்


சாடிப் பலவண்ணப் பூச்செடிகள் பன்மணியைச்
சாடித் தளிர்த்துத் தெருவெல்லாம்-நாடியே
பண்டழைக்க வண்டினத்தைப் பாடுங்கள் என்றுதேன்
கொண்டழைத்துக் கொண்டிருக்கும் அங்கு.



ஆடல் பாடல்


தெருமுடிவில் ஆடலும் பாடலும் கொள்வார் 
திருமுடிவில் வேந்தன் திறலே-ஒருமுடிவில்
சீர்வாழ்த்தி மன்றப் புலவரெல்லாம் செந்தமிழின்
பேர்வாழ்த்த நிற்பார் பெரிது.
25



குழந்தைகள் தமிழ் பாடல்


மைச்சிட்டுப் பாடும் மருங்கில் அதன்ஒலியை
அச்சிட்டுக் காற்சிலம்பு பாடவே-தச்சிட்ட 
பாவை அசைந்தாடும் பாங்கில் குழந்தைதமிழ்
நாவை அசைத்தாடும் நன்கு.
30



தமிழ் மலரும் மன்றங்கள்


அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறம்பொருள் இன்னவெனத் தேர-உறங்கும்
சிலரும் விழிக்கத் தமிழின் சிறப்பு 
மலரும் புலவர்தம் மன்று.
35



காவேரி சென்று ஆடினார்கள்


காற்றினிலே ஆடை பறக்கப்போய்க் காவேரி
ஆற்றி னிலாமுகத்தார் ஆடுவார்-நேற்றிரா
உண்டஇதழ் கொம்புத்தேன் காதலர்கள் அந்நேரம்
கண்டஇதழ் மாணிக்கக் காடு.
40



மக்கள் நெருக்கம்


நீராடி மீளும் நெடுந்தேர் பரிதாண்டி
நேராடப் போவார் நெருக்கடைவார்-ஆரிழையார்
பின்னடக்க மாச்செல்வர் பீடுமலர்க் கைப்பற்றி
முன்னடக்க மாச்செல்வர் மொய்த்து.



அரசுக்கு வாழ்த்து


வாழிய சோழமன்மா வண்கிள்ளி செங்கோலே 
வாழிய சோழன் வரிப்புலிநீ-டுழி
எனப்பாவை யார்வந்தால் பாடினார் கூத்த
ரினப்பாவை யார்ஆடி னார்.
45



அரசவையில் அவள் ஏன் இல்லை?


போதவிழும் கூந்தலார் போந்தாடும் போதெல்லாம்
மாதவியும் மேகலையும் வாராரோ-ஏதவர்க்கு 
நேர்ந்ததென் றார்சில்லோர் நேர்மைஇது வோஎன்றார்
சேர்ந்ததிது தாயின் செவி.
50



மாதவியின் தாய் 'மாதவியையும் மணிமேகலையையும் அழைத்துவா' 
என்று பாங்கிக்குக் கூறினாள்


பிழைஎன்றாள் மாதவிதாய் பெண்பேர்த்தி மாரை
அழைஎன்றாள் மன்றத்தில் ஆட- உழையிருந்த
பாங்கி நடந்தாள் அப் பச்சைமயில் அச்சவிடை
55



மாதவியிடம் பாங்கி உரைத்தாள்


ஆங்கிருந்த மாதவியை அன்பால் அணுகியே
'நீங்கா உமதுகடன் நீங்கிற்றோ-ஊங்காட
ஏன்மறந்தீர் ஏற்ற கலைவல்லீர்? மாமதிதான்
வான்மறக்கு மோ?' என்றாள் மாது.
60



மாதவி¢ பாங்கியிடம் கூறுகின்றாள்


காவலனைக் காற்சிலம்பால் வென்று கொலையுண்ட
கோவலன் கொண்டகுடிப் பேர்காத்த-பாவை
தரத்தைஆய் வாளாதன் தாமரைபோற் கண்ணாள்
பரத்தைஆய் வாழ்வாளா பார்.



மணிமேகலை அவைக்கு வரமாட்டாள்
என்கின்றாள் மாதவி


இன்பமெனல் நற்றவத்தால் எய்துவதாம் மற்றுள்ள 
துன்பமெனல் இவ்வுலகில் தோய்வவாம்-என்பதவள்
எண்ணம்மணி மேகலைதான் ஏகாள் அவை; இஃது
திண்ணம்எனச் செப்பினாள் தாய்.
65



அறவண அடிகளிடம் மாதவி சொன்னாளாம்


அல்லலுற்றேன் காதலனின் கண்ணகியின் அல்லலெல்லாம்
சொல்லலுற்றேன் வந்திங்கே; தூய்நெறியே-செல்லலுற்ற 
அண்ணல் அடிகள் அறவணர்பால்! நான் அதன்மேல்
நண்ணல் நவின்றார் அவர்.
70



அறவணர் சொல்லியது


எப்பொருட்கும் ஆட்படுதல் இன்றி இடரற்ற
மெய்ப்பொருள் ஆதல் விடுதலை-அப்பொருளின்
பற்றுக்குப் பற்றுவிட வேண்டுமென்றார் மற்றஎலாம் 
எற்றுக்கென் றாள்மா தவி!
75



மாதவி ஆயத்தார்க்கும் அன்னைக்கும்
சேதி அறிவித்தாள்


அம்மைக்கே ஆயத்தி னோர்க்கே அறிவி என்று
செம்மைக்கே ஆயத்தி செப்பினாள்-கைம்மேல்
இருந்த மணியே இழந்தவள்பொல் நெஞ்சம்
வருந்த நடந்தாள்அம் மாது.
80



ஆங்கு ஒரு புறம் பூத்தொடுக்கும் மணிமேகலை நிலை


கோவலனின் மாதவியின் அன்பின் கொடை! அழகை
மேவலரும் போற்றுமணி மேகலைதான்-ஆவலுடன்
பாத்தொடுத்துக் கொண்டிருப்பார் போலுமொரு பாலிருந்து
பூத்தொடுத்துக் கொண்டிருï¢î£ள் ஆங்கு.



மணிமேகலை பூத்தொடுக்கும் திறம்


பன்மலர்க்காம் பொவ்வொன்றும் பச்சைமயில் மேகலைதான் 
மென்மôர்க்கைக் காந்தள் விரல்பற்றித்-தன்மலர்க்கண்
கூறுமுறை கோணாமல் கட்டுந்தார் õண்ணத்தை
நூறுமுறை நோக்கல் தகும்.
5



மாதவி பாங்கியிடம் கூறிய வர£று
மணிமேகலையை வருத்தியது


ஆங்கிருந்த மாதவிதன் ஆளன்மனை யாளிடரைப்
பாங்கிருந்த பாங்கிக்குக் கூறியதைக்-கோங்கிருந்த 
வண்டார் குழலி மணிமே கலைசெவியால்
மொண்டாள் முறிந்தாள்தன் நெஞ்சு.
10



மணிமேகலை கட்டிய மாலை கண்ணீரில் மிதந்தது


காவலன்தன் காவல் பிழைத்தது¾ம் கண்ணகியும்
கோவலனும் மாண்டதுவும் கூறியதைப்-பாவை
நினைப்பாள் நிலைதளர்வாள் கண்ணீரை ஊற்றி 
நனைப்பாள் நறுமலர்த்தா ரை.
15



மாதவி அறிந்தாள்


கரும்பிருக்கும் சொல்லும் கனியுதட்டின் ஓரம்
அரும்பிருக்கும் அஞ்சிரிப்பும் எங்கே?-திரும்பித்தாய்
பெண்கண்டாள் பெண்தொடுக்கும் மாலைமிதக் கக்கண்டாள்
கண்கண்டாள் கண்ணீர்கண் டாள்.
20



வேறு மலர் வேண்டினாள் தாய்


ஆறொன்று கண்ணீர் அலங்கலைத்தீ தாக்கியதால்
வேறொன்று காணமலர் வேண்டென்று-வீறொன்று
நெஞ்சினாள் மாதவிதான் நேர்ந்த துயர்மாற்றக்
கெஞ்சினாள் கேட்டாள் கிளி .



மணிமேகலை வெளியிற் செல்லுவதைப்
பாங்கி எதிர்த்தாள்


ஈதுரைக்கக் கேட்ட எழிற்பாங்கி அன்னையீர் 
ஏதுரைக்க லானீர் இதோஇந்த-மாதுரைக்கின்
மையேந்து கண்ணாய் மயல்தீர்க்க வேண்டுமென்று
கையேந்தும் கண்டால் உலகு.
25



மேலும் பாங்கி கூறுகின்றாள்


போது பறிக்கஎங்கும் போகவிì£ தீர்அழகு
மாது பறிக்கஎங்கும் மாநிலத்தின்-மீது 
விழிதிறந்து வாழ்கின்றார் வேந்தர் அழிவுக்கு
வழிதிறந்து வாழ்வோமோ நாம்.
30



உதய குமரனால் கேடு வரக்கூடும்


எவ்வனமே சென்றாலும் ஏந்தலின் தோன்றலுக்குச்
செவ்வனமே செப்பப் பலருள்ளார்-இவ்வனம்
மல்லல் உவவனம்! மங்கையுடன் நானுமே 
செல்லவெனிற் செல்வேன்என் றாள்.
35



தாய் ஒப்புக்கொண்டதால் இருவரும் எழுந்தார்கள்


தன்னில் எழுந்த தமிழ்ப்பாட்டும் சொல்மாற்றிப்
பின்னி எழுந்த பிழைப்பாட்டும்-என்ன
ஒருமணி மேகலையும் பாங்கியும் ஆன
இருமணியும் சென்றார் âழுந்து.
40



மணிமேகலையும் சுதமதியும் காட்சிக்கு மகிழ்வார்
மனம் கவிöõ¢õó¢


கூட்டுக் கிளிகள் இருக்கை குறையாக்கிக் 
காட்டு மயிலாகிக் கால்வைத்த-பாட்டையெலாம்
ஒவ்வொன்றும் காண்பார் வியப்பார் உருகுவார்
எவ்வொன்றும் ஈடு படார்.



ஒரு களி உண்ணா நோன்பியைக்
கள்குடிக்க அழைக்கின்றான்


பண்ணாத நல்ல சுவைநீர் பருகிடலாம் 
உண்ணாத நோன்பிகளும் உண்ணிலொன்றும்-பண்ணாதென்
றுள்ளுக் கழைத்தான் ஒருகளி! நோன்பிகண்டான்
கள்ளுக் கடைஎன்ற பேர்.
45



பெருங்களி இயல்பு


மறுகு படுபிணத்தின் காதில் மகிணன்
அறுகு செலுத்த அவனைக்-குÁகினான் 
கட்குடித்தேன் ஓய்வெடுத்தேன் என்றான்ஏன் ஓய்வென்னக்
கட்குடிக்கத் தான் என்றான் காய்ந்து.
50



வையம் துன்பம் நிறைந்தது


வைய நடைமுறையில் துன்பமே வாய்ப்பதன்றி
உய்யுமா றில்லைஎன உரைத்துத்-துய்ய
மணிமே கலைஅம் மறுகு நடந்தாள் 
அணிமேவும் அப்பாங்கி யோடு.
55



எங்கும் குறைபாடு


பொன்னைக் குவித்துவைத்தோன் பொங்கலுண்ண [வாழையிலைத்
தொன்னை திருடுகையில் தோதுண்டு-பின்ஒருவன்
மேலாடை மேற்சென் றிழுப்பான் அவன்செருப்பைக்
காலாடி னான்ஒருவன் கண்டு.
60



பற்று நீங்க வேண்டும


இறைபாடென் பட்டாலும் இன்மைபோ னாலும்
குறைபா டிலாமலிரா தென்று-மறைபாடும்!
ñற்று விடுதலை வேண்டின் மனமே
பற்று விடுதலை வேண்டு.



உவவனம் சேர்ந்தனர் மணிமேகலையும் சுதமதியும்


என்றிளை யாளேதன் பாங்கியுடன் இங்குமங்கும் 
நின்றிளை யாததொரு நெஞ்சமுடன்-சென்றவளாய்க்
காணா உவவனம் பாங்கிதான் காட்டிடவே
பூணா வியப்புப்பூண் பாள்.
65



மணிமேகலை வந்தபோது அவளைக் கண்டவர்கள்
என்ன ஆனார்கள்


மாது மலர்வனத்தைக் காண்பாள்! வழிநடந்த
போது பலர்கண்டு பூண்ட இறும்-பூது 
புகல விரும்பினேன் பொன்றாத் தமிழ்விட்
டகல விரும்புவார் ஆர்?
70



கள்குடத்தின் உள்ளிருந்த கள்ளிலும் மணிமேகலை உருவம்


கட்கடைக்கே ஆளானார் கார்குழலைக் கண்டுகருங்
கட்கடைக்கே ஆளாகக் காத்திருந்தார்-கட்குடத்தை 
எண்ணார்கள் எண்ணுகையில் கட்குடத்துள் கண்ணுக்குக்
கண்ணாளைக் கண்டார் கவிழ்ந்து.
75



மணிமேகலை துண்டு உடுத்துப் போகும்படி செய்தவர் யார்?


பண்டுடுத்தும் பட்டில்லை பல்லிழைகள் இல்லைஇவள்
துண்டுடுத்துப் போகின்றாள் தொல்லுலகு-கண்டெ´த்த
தங்கப் படிவம் தவத்துக் குடன்பட்டாள்
இங்கிப் படிச்செய்தார் யார்?
80



மணிமேகலை கண்டாலே தித்திக்கும் தேன்


குன்றத்துக் கொம்புத்தேன் முல்லைவா ழைப்பழத்தேன்
மன்றத்து மாப்புலவர் செந்தமிழ்த்தேன்-என்றமுத்தேன்
உண்டாலே தேன்! இம் மணிமே கலைஒருத்தி
கண்டாலே தித்திக்கும் தேன்.



வைய விளக்கை யாருக்குமில்லாமல் ஆக்கினரே


தையலை இவ்வாறு தவக்குழியில் தள்ளுவதோ? 
வைய விளக்கை மருக்கெழுந்தை-ஐயையோ
ஆருக்கு மில்லாமல் ஆக்கினரே பெண்ணழகின்
வேருக்கு வெந்நீரை விட்டு.
85



யாழெடுத்தவன் மணிமேகலையைக் கண்டு, யாழின்
மேலேயே சாய்ந்து கிடந்தான்


என்று பலரும் இயம்பி வருந்தினார்
சென்று பரத்தை தெருவறைக்குள்-ஒன்றை 
நினைத்துயாழ் தொட்டஎட்® நேரிழையைக்கண்டே
அனைத்துñ¢ மறந்திருந்தான் ஆங்கு.
90



உதயகுமரன் மணிமேகலை பற்றிக் கேள்விப்படுகிறான்


அந்நேரம் தேரேறி அங்குவந்த வேந்தன்மகன்
இந்நேரம் யாரால் நீ இன்னலுற்றாய்-முன்னே
அதையுரைப்பாய் என்றுரைத்தான்: அன்னம் நடந்த 
கதையுரைப்பான் எட்டி கடிது.
95



எட்டியின் இரக்கம


சின்னஞ் சிறியஇடைச் செல்விமணி மேகலையாம்
அன்னம் அழகு சுமந்தகன்றாள்-முன்னமெல்லாம்
பட்டுடுத்தும் பான்மையினாள் இன்று தருநெறிக்குட்
பட்டுடுத்தும் பான்மையினாள் ஆய்,
100



மணிமேகலையைப் பார்த்தேன்; கோவலன்
வரலாறு நினைவுக்கு வந்ததும் யாழில் சாய்ந்தேன்


அன்னாளைக் கண்டேன் அவள்தந்தை கோவலனின்
முன்னாளை எண்ண முறிந்ததுள்ளம்-என்யாழில்
இட்டவிரல் தீநரம்பில் இட்டதாம் என்றெட்டி
பட்டதுயர் சொன்னான் பதைத்து.



மணிமேகலையை என்தேரில் ஏற்றி வந்துவிடுவேன்


அப்படியா அன்னாளைச் சென்று மணித்தேரில் 
எப்படியும் ஏற்றிவந்தென் இற்சேர்ப்பேன்-அப்பொன்னை
நீணாள் நினைந்தும் நெருங்காத என்வாணாள்
வீணாள்என் றானிளைய வேந்து.
105



உதயனின் கண்ணுக்கு வழியெல்லாம் மணிமேகலை


குளிர்காற்றுக் கூந்தல் அருவியோ! தேமாந்
தளிர்மாது மேனியோ! தண்டை-ஒளிர்வண்டோ? 
என்பான் எதிலும் மí¤மே கலைகாண்பான்!
தென்பாô¢ ïடத்தினான் தேர்.
110



மணிமேகலையும் பாங்கியும் இன்னும் உவவனக் 
காட்சியைக் கண்டு மகிழ்கின்றார்கள்


ஏடகத்துக் காட்டாத இன்பத்தை நல்லியற்கை
நாடகத்தை நங்கையும் பாங்கியும்-தேடிஎப்
பாலும்கண் டார்கள்! பகர்ந்து பகர்ந்துமேன்
மேலும்கண் டார்கள் விழைந்து!
115



மயில் தோகையில் மறைந்தது ஒரு மான்


களித்தாடும் மஞ்ஞைக் கவின்தோகை யின்பின்
ஒளித்தாடும் மானை ஒருமான்-விளித்தோடி
மாவடிக்குப் பின்னிருந்த மந்தியின் செவ்வலரிப்
பூவடிக்குப் புண்ணாகும் நெஞ்சு.
120



மாலை புனைந்து குளத்துக் கண்ணாடி பார்க்கும் ஒரு குரங்கு


விண்ணாடி மாம்பூ விரிதார் புனைகடுவன்
கண்ணாடி காணும் ஒருகுளத்தின்-உண்ணாடி
மாம்பழத்தைப் போடப்போம் மந்தியினை நீள்வரால்
ஆம்! பழத்தைப் போடென்னும் அங்கு!



தவளை விளைத்த குழப்பம


குவளை விழுந்த குளத்தில் எழுந்து 
தவù÷ தளபுளா என்ன-உவளுகின்ற
கெண்டை நடுங்கும்; கிளிகுயில் வண்டெல்லாம்
தொண்டை நடுங்கும் தொடர்ந்து.
125



அல்லியை வெறுக்கும் பலாவைப் பாடும் வண்டு


மூடிய அல்லிக்கு மொய்க்காமல் தாமரைக்குப்
பாடிய வண்டு பலாமரத்தை-நாடியதன் 
பேருக்கும் தன்பெரிய பிள்ளைக்கும் முள்ளுக்கும்
வேருக்கும் பாடல் வியப்பு;
130



முத்துக்கு முல்லைச் சிரிப்பு நிகர்!


என்றுக்கு வெண்முருக்கும் பூநிகர்! ஏழிசை
மன்றுக்கு வண்டுநிகர்! வானிமிர்ந்த-கொன்றைப்பூங்
கொத்துக்குப் பொற்காசின் கோவைநிகர்! முற்றுநிகர் 
முத்துக்கு முல்லைச் சிரிப்பு!
135



நெடுந்தொலைவிலிருந்து ஓர் ஒலி!


அண்டுமலர்ச் சோலை அழகு வரிசையெல்லாம்
கண்டுவரும் போதுதன் காதினிலே-நண்டு
நிகர்அங்கை சேர்த்து நெடுந்தொலை ஆய்ந்து
பகர்வாள்தன் பாங்கியைப் பார்த்து
140
by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.