மணிப்பூர் மாநிலத்தில் மாலும் நகரில் கடந்த 2000-ம் ஆண்டு அசாம் ரைபிள்ஸ் படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பொதுமக்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதை மணிப்பூர் மாநிலமே கண்டித்தது.
இப்படுகொலையைக் கண்டித்தும், இதற்கும் மேலாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அரசு திரும்பப் பெறக்கோரியும் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துவருகிறார். ஐரோம் ஷர்மிளா எனும் இளம்பெண்.
கடந்த 2006ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அனுமதிக்காத அரசு, பாதுகாப்புப்படையினர் மூலமாக வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை வைத்தனர். எனினும் தனது உண்ணாவிரதத்தினைக் கைவிட மறுத்து கடந்த 12 ஆண்டுகளாக உறுதியுடன் போராடி வருகிறார் ஐரோம் ஷர்மிளா. எனவே, ஷர்மிளா மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 309 -ன் கீழ் தற்கொலை முயற்சி வழக்கினை டில்லி தொடர்ந்தது அரசு. இந்தவழக்கு தொடர்பாக நேற்று டில்லி ஜந்தர் மந்தர் கோர்ட்டிற்கு வந்து வழக்கில் ஆஜராகினார் ஐரோம் ஷர்மிளா.
உண்ணாவிரதம் இருப்பது தனது தனிப்பட்ட சுதந்திரம் எனவும், மேலும் இவ்வழக்கினை மணிப்பூரின் தலைநகரான இம்பாலிலுள்ள கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் எனவும் ஷர்மிளா சார்பில் வக்கீல் மனு தாக்கல் செய்தார்.
|