மூன்று நாள் சுற்று பயணமாக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானிய தமிழ் அறிஞர் நொபோரு கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.
ஜப்பானைச் சேர்ந்த நொபோரு கராஷிமா தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். தேன் தமிழில் சரளமாக பேசும் அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ் ஆய்வு மேற்கொண்டார். அவரின் தமிழ் சேவையை பாராட்டும் விதமாக அவர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் நடைபெற்ற விழாவில் நொபோரு கராஷிமா பத்மா ஸ்ரீ விருதை வழங்கினார்.
|