தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, வடமாநிலங்களில் நடைபெறும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளதும், தமிழகத்திலிருந்து எழுந்த எதிர்ப்பும் பிரதமர் கலந்து கொள்ளாததற்கு முக்கிய காரணங்களாகும். பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு இதுகுறித்து நேற்று கடிதம் எழுதியுள்ளார். இலங்கையுடன் இந்தியா முக்கிய உறவு வைத்துள்ளது. இதனை திடீரென முறித்துக்கொள்ள இயலாது என சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
|