|
|||||
சி.பி.ஐ விசாரணைக்கு நான் தயார் : சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் !! |
|||||
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில், சி.பி.ஐ., விசாரணையை சந்திக்க தயாராக இருப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
சீன சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பும் வழியில், சிறப்பு விமானத்தில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்தார்.
அப்போது, செய்தியாளர்கள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள மன்மோகன் சிங், தான் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக நடத்தப்படும் அநாகரிக அரசியல் குறித்து தான் வேதனை படுவதாகவும் கூறியுள்ளார். எல்லையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர், இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவத்துள்ள பிரதமர், பா.ஜ.க, வின் பிரசாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப்போக அது வலிமையற்றதாகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 24 Oct 2013 0 Comments | |||||
Tags: மன்மோகன் சிங் நிலக்கரி ஒதுக்கீடு நிலக்கரி ஊழல் விசாரணைக்கு தயார் Manmohan Sing CBI Coal Scam | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|