LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

மன்னனைக்கண்டாள்

தென்பாங்கு -- கண்ணிகள்

தேசிங்கு மன்னன் - சில
    சிப்பாய்க ளோடு
    பேசிச் சிரித்தே - தன்
    பெருவீடு விட்டு
    மாசற்ற தான - புனல்
    மடுவிற் குளிக்க
    வீசுங் கையோடு - மிக
    விரைவாய் நடந்தான்!

    எதிர்ஓடி வந்தாள் - நல்
    எழிலான மங்கை.
    'சுதரிசன் சிங்கன் - என்
    துணையைப் பிரித்தான்;
    மதில்வைத்த கோட்டை - தனில்
    வைத்தே மறைத்தான்;
    எதைநான் உரைப்பேன்? - அவன்
    எனையாள வந்தான்.

    குடிபோன வீட்டை - அக்
    கொடியோனும் நேற்று
    நடுவான இரவில் - அவன்
    நாலைந்து பேரால்
    முடிவாய்ந்த மன்னா! - அனல்
    மூட்டிப் பொசுக்கிக்
    கடிதாக என்னை - அவன்
    கைப்பற்ற வந்தான்.

    தப்பிப் பிழைத்தேன் - இதைத்
    தங்கட் குரைக்க
    இப்போது வந்தேன் - இனி
    என்க ணவரைநான்
    தப்பாது காண - நீர்
    தயைசெய்ய வேண்டும்
    ஒப்பாது போனால் - என்
    உயிர்போ கும்'என்றாள்.

    'சுதரிசன் சிங்கன் - நம்
    சுபேதாரும் ஆவான்;
    இதை அவன்பாலே - சொல்
    ஏற்பாடு செய்வான்.
    இதையெ லாம்சொல்ல - நீ
    ஏனிங்கு வந்தாய்?
    சதையெலாம் பொய்யே - இத்
    தமிழருக்' கென்றான்.

    தேசிங்கு போனான் - சில
    சிப்பாய்கள் நின்று
    'பேசினால் சாவாய் - நீ
    பேசாது போடி.
    வீசினாய் அரசர் - வரும்
    வேலையில் வந்தே
    பேசாது போடி' - என்று
    பேசியே போனார்.

    என்ற சொற்கேட்ட - அவ்
    வேந்தி ழைதீயில்
    நின்ற வள்போல - ஒரு
    நெஞ்சம் கொதித்து
    'நன்று காண்நன்று! - மிக
    நன்று நின்ஆட்சி!
    என்றே இகழ்ந்து - தணல்
    இருகண் கள்சிந்த

    படைவீடு தன்னை - அவள்
    பலவீதி தேடி
    கடைசியிற் கண்டு - நீள்
    கதவினைத் தட்டி
    'அடையாத துன்பம் - இங்
    கடைகின்ற என்னை
    விடநேர்ந்த தென்ன? - நீர்
    விள்ளூவீர்' என்றாள்.

    'கொண்டோன் இருக்க - அவன்
    கொடுவஞ் சகத்தால்
    பெண்டாள எண்ணி - மிகு
    பிழைசெய்த தீயன்
    உண்டோ என்அத்தான் - அவன்
    உம்மோடு கூட?
    எண்ணாத தென்ன - எனை?
    இயம்புவீர்' என்றாள்.

    'உள்ளி ருக்கின்றீர் - என்
    உரைகேட் பதுண்டோ?
    விள்ளு வீர்'என்றாள் - அங்கு
    விடை ஏதுமில்லை.
    பிள்ளை போல்விம்மிப் - பெரும்
    பேதையாய் மாறி
    தெள்ளு நீர்சிந்தும் - கண்
    தெருவெ லாம்சுற்ற

    கோட்டையை நீங்கி - அக்
    கோதையாள் சேரி
    வீட்டுக்கு வந்து - தன்
    வெறுவாழ் வைநொந்து
    மீட்டாத வீணை - தரை
    மேலிட் டதைப்போல்
    பாட்டொத்த சொல்லாள் - கீழ்ப்
    படுத்துக் கிடந்தாள்!

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.