|
|||||
பிகார் ரயில் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் - 3 பேர் பலி ! |
|||||
பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தன்பாதிலிருந்து பாட்னா நோக்கிச்
சென்றுகொண்டிருந்தது, மதியம் 1.20 மணியளவில் ரயில் குந்தர்ஹோல்ட் பகுதியை கடக்கும்போது சுமார் 150-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ரயிலை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில்
ஆர்பிஎப் வீரர் சுக்நாத் டி. சிங், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் அமித் மற்றும் ஒரு பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ரயில்வே கார்டு கே.பி.சிங், ரயில்வே ஊழியர் மனோஜ் குமார்
சிங், லக்கிசராய் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர ஷா, பாட்னாவைச் சேர்ந்த பி.கே.திரிபாதி, முஸாபர்பூரைச் சேர்ந்த சதீஷ் குமார் ஆகிய பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை
அடுத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தலைமறைவாகிவிட்ட மாவோயிஸ்டுகளை தீவிரமாக தேடும் பணியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தன்பாதிலிருந்து பாட்னா நோக்கிச் சென்றுகொண்டிருந்தது, மதியம் 1.20 மணியளவில் ரயில் குந்தர்ஹோல்ட் பகுதியை கடக்கும்போது சுமார் 150-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ரயிலை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஆர்பிஎப் வீரர் சுக்நாத் டி. சிங், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் அமித் மற்றும் ஒரு பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ரயில்வே கார்டு கே.பி.சிங், ரயில்வே ஊழியர் மனோஜ் குமார் சிங், லக்கிசராய் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர ஷா, பாட்னாவைச் சேர்ந்த பி.கே.திரிபாதி, முஸாபர்பூரைச் சேர்ந்த சதீஷ் குமார் ஆகிய பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தலைமறைவாகிவிட்ட மாவோயிஸ்டுகளை தீவிரமாக தேடும் பணியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
|
|||||
by Swathi on 13 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|