LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

மரணத்தை விழுங்கும் ரகசியம்..

1, சிரிப்பழிவதைக் காட்டிலும் 

ஒரு கொடூர வலியில்லை..,

கூடஇருந்து சிரிப்பவர் 

நடப்பவர்
உடன் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர்   
இறப்பதைக்காட்டிலும் 

தன் மரணமொன்றும்
தனக்குப் பெரிதாக 

வலித்துவிடப் போவதில்லை..,

போனவரை 

போனவராக 

விட்டுவிட இயலாததொரு 

நினைவு எரிக்கும் 

நடைபிண வாழ்க்கையே நம் வாழ்க்கை..,

குலுக்கி குலுக்கி
உண்டியல் ஆட்டிக் காண்பிக்கும்

சிறுபிள்ளையினைப்போல

இயற்கை நமை குலுக்கி குலுக்கி யாரையோ

ஒருவரை நம்மிடமிருந்து - நம்
வலியறியாமலே கொண்டுபோய்விடுகிறது.,

இப்படி

ஒவ்வொருவரையாய்

உடனிருப்போரை

இழந்து இழந்து

மெல்ல

மெல்ல

எரிந்து எரிந்து 

தீரும் மெழுகாக நின்றுக் கரைவதைக் காட்டிலும் 

ஒரு காற்றாடித்தாற்போல் 

சட்டென நின்றுவிடலாம்; அது மேல்!!

 

2, சாவு 

மாலை 

ஊதுவத்தி 

விளக்கு 

உடஞ்ச தேங்கா 

மேளம் 

கதறல் 

கூத்து 

எரிக்கிறது 

புதைக்கிறது 

என்னத்தைதான் செய்து தொலைத்தாலும்

கண்முன் நிற்கிறதே அந்த முகம் (?)

அந்த முகத்தின் நினைவு (?)

அதை எது கொண்டு எரிப்பது ?

இப்படிக் கண்ணீர்க்கொண்டு அழிப்பதைக் காட்டிலும்

செந்நெருப்பு மூட்டி போ;

மூளட்டும் பச்சை தேகமெங்கும் தீ
விட்டுப்போகட்டுமந்த பிரிவில் வலிக்கும் உயிர்!!

 

3, நெருப்பு உள்ளிருக்கும் 
தீக்குச்சிகளைப்போலவே மனதுள் 
உரசிக்கொள்கிறது நினைவுகள்..
சமயம் பார்த்து
தானே எரியும் தீக்குச்சிகளையோ 
யாரோ கொளுத்திவிடும் யதார்த்தத்தின் 
அனல் பட்டு வலிக்கும்
ஏக்கத்தின் வடுக்களையோ கூட 
தொட்டுப் பார்த்து தொட்டுப்பார்த்து
அழத்தான் செய்கிறது மனசும்..
உண்மையில் மனதழும் கண்ணீருக்கெல்லாம்
வேரே இருப்பதில்லை, 
யாரோ தூவிய விதையின் கிளையாக 
ஆயிரமாயிரம் மரங்கள்
அதுவாக உள்ளே முளைத்துக்கொண்டு
அதுவாக ஆடுகிறது
அதுவாக வலிக்கிறது, 
காற்றில் படாமல் வழியும் 
கண்ணீருக்கு ரத்தம் சமமென்று 
சாகும்வரை தெரியாமல் 
வாழ்வை மிதித்து மிதித்து தள்ளியவாறு 
மயானக் காடுதேடி அலைவதே 
மனிதருக்கிடப்பட்ட சாபம் போல்..
யாரோ அடிக்கிறார்கள் 
யாரோ அணைக்கிறார்கள் 
எங்கோ நிற்கிறோம் 
எப்படியோ மறைகிறோம் 
சட்டென அணைகிறது விளக்கு
சாம்பலாகிப் போகிறது உடல்,
சுயம் அழிந்துப்போகிறது 
ஒன்றுமில்லா -
அந்த இடத்திலும் நினைவுகள் மரங்களாகின்றன
மரங்கள் காடாகிறது,
காடெங்கும் தீக்குச்சி 
தீக்குச்சி எங்கும் நெருப்பு 
உள்ளே வலிக்கும் நெருப்பு
நினைவு தகிக்கும் நெருப்பு,
எல்லோரையும் எல்லாமுமாக இருந்து
கண்ணீரால் சுடும் நெருப்பின் ரணம் 
ரணம்
ரணமெங்கும் பரவி நின்றுக்கொண்டு
செத்தும் சுடுமிந்த மரணம்..
மரணம்..
மரணம்..
என்னதான் 
செய்வதிந்த மரணத்தை? 
இதோ நானெடுத்து விழுங்கிவிடுகிறேன் - இனி 
எனது கண்முன் யாரின் மரணமும் நிகழாது.. 
 
வித்யாசாகர்
by Swathi   on 04 Jun 2015  1 Comments
Tags: Maranam   Ragasiyam   Vidhyasaagar   மரணம்   ரகசியம்   வித்யாசாகர்   வித்யாசாகர் கவிதைகள்  
 தொடர்புடையவை-Related Articles
மகளெனும் கடல்.. வித்யாசாகர்! மகளெனும் கடல்.. வித்யாசாகர்!
மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்! மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்!
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்! ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்!
என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர் என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர்
கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்.. கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்..
கருத்துகள்
23-Jan-2016 03:23:58 விஜயகுமார் said : Report Abuse
அருமை நண்பரே !!! நெஞ்சை உருக்கிய வரிகள் !!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.