LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

மறப்பதில்லை மாறுவதற்கு.. - வித்யாசாகர்

வாழ்க்கையின் அத்தனை
அவசர ஓட்டத்திற்கு நடுவேயும் நான்
உன்னையும் நினைத்துக்கொண்டே ஓடுவதை
யாரறிவார்..?

உன் பிறந்ததினம்

நீ முதலில் பேசிய நாள்

அதிர்ந்துப் பார்த்தப் பார்வை

தெருமுனை

உன் எதிர்வீட்டு சன்னல்

நீ எதிரே நிற்குமந்த
மொட்டைமாடி

கடைசியாய்
விளக்கமர்த்த வருமந்தப்
பின்னிரவு

பிடிக்காவிட்டாலும்
தெருவில் நிற்க வாங்கும் ஏதேதோ

எனக்காக சுமந்த உன்
கனவு

நீ அழுத வலி

காத்திருந்த நாட்கள்

பெற்றிடாத நம் முத்தம்

எல்லாம் எல்லாம் எல்லாம்
என்னோடிருக்கிறது..

நினைவு முழுதும்
நீ இருக்கிறாய்

இன்னும் நூறுவருடம்
கழித்துக்கூட வந்து கேள்
ஒரு சொட்டுக் கண்ணீருக்குள்
பத்திரமாய் வைத்திருப்பேன் உன்னை!

 

- வித்யாசாகர்

by Swathi   on 27 Feb 2015  0 Comments
Tags: வித்யாசாகர்   காதல் கவிதைகள்   Marappathillai Maaruvathatku   Kadhal Kavithai           
 தொடர்புடையவை-Related Articles
மகளெனும் கடல்.. வித்யாசாகர்! மகளெனும் கடல்.. வித்யாசாகர்!
மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்! மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்!
குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர் குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர்
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்! ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்!
என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர் என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.