LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1207 - கற்பியல்

Next Kural >

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.)
மணக்குடவர் உரை:
அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அக் கூட்டக்காலை யின்பத்தை ஒருபோதும் மறத்தலறியேனாய் இன்று அதை நினைக்கும்போது கூட; பிரிவுத் துன்பம் என் உள்ளத்தைச் சுடுகின்றதே! மறப்பின் எவன் ஆவன் - இனி, அதை அடியோடு மறந்துவிடின் நான் என்ன நிலைமையடைவேனோ! இறைவன்தான் அறிவான். மறத்தற்கும் உள்ளுதற்கும் செயப்படுபொருள் அதிகாரத்தாலும் மேற்குறளினின்றும் வந்தது. 'மன்' நான் உயிர்வாழ வேறொரு வழியும் பெற்றிலேன் என்பது பட நின்றமையின் ஒழியிசைக்கண் வந்தது. 'கொல்' அசைநிலை.
கலைஞர் உரை:
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.
சாலமன் பாப்பையா உரை:
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.
Translation
If I remembered not what were I then? And yet, The fiery smart of what my spirit knows not to forget!.
Explanation
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?.
Transliteration
Marappin Evanaavan Markol Marappariyen Ullinum Ullam Sutum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >