LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

மரத்தின் அருமை! - இல.பிரகாசம்

உயிரின் மதிப்பை உணரவில்லை ஓர்
உண்மையான உயிரின் மதிப்பை
நான் உணரவில்லை!

தாலாட்டு பாடி என்னைத்
தூங்கவைக்க தாய்க்கு நிழல்கொடுத்த
உயிர் அது!

கோடைக் காலத்தில் நான்
ஓடியாடி விளையாடி களைப்படைந்து
ஓய்வெடுக்க ஒதுங்கியபோது
தாயாக இருந்து என்னை
தன்நிழல் மடியில் ஏந்திக் கொண்ட
உயிர் அது!

பசியென்று வந்த போது தென்றல்
காற்றில் அசைந்து நல்ல
கனியை தந்த வள்ளல்
தன்மை நிறைந்த
உயிர் அது!

கிளைகளிலே தூரிக் கட்டி
ஊஞ்சல் ஆடிய போது
கண்ணே மெல்ல ஆடு என்று
மனதோடு பேசிய
உயிர் அது!

இன்றைக்கு காலையில் எழுந்து
பார்த்த போது
டொக் டொக் என்று அதன்
உடலில் வெட்டுகின்ற சப்தம் கேட்டேன்;
மனது கலங்கியது என்
தாயை நூறு துண்டங்களாய்
கூறுபோடுவது போல் உடலில் நடுக்கம்

“கிழட்டு கட்டை சாஞ்சு போச்சு
அடுப்பெரிக்க உதவும”; மென்று கூறினார்கள்
இறந்து போன தாயின் உடலை
நெருப்பிலே வாட்டுவது போலே
எண்ணத்தி லெல்லாம் தோன்றியது!

இனிமேல் அந்த உயிரிடம்
மனதோடுபேச முடியாது என்று நினைத்தேன்
அதன் அடிக்கட்டை எச்சமாயிருந்து என்
நினைவில் வந்து வந்து செல்கிறது!

அடிபட்டபோது வெட்டச் சொன்ன என்னை
திருப்பி கேட்டு சிரிப்பது போலிருந்தது
சிறுவயதில் ஓர் உண்மையான
உயரின் மதிப்பை உணரவில்லை
இப்போது உணர்கிறேன் சுவாசிக்க
நல்ல காற்று இல்லாத போது!

-இல.பிரகாசம்

by Swathi   on 06 Apr 2016  1 Comments
Tags: Maram   Marathin Arumai   Kavithai about Tree   Maram Kavithai   மரம்   மரம் கவிதை   மரத்தின் அருமை  
 தொடர்புடையவை-Related Articles
பனை மரத்தின் வகைகள் பனை மரத்தின் வகைகள்
நீயும் நானும் சகோதரிகள் நீயும் நானும் சகோதரிகள்
அரசமரம்  -இல.பிரகாசம் அரசமரம் -இல.பிரகாசம்
மரத்தின் அருமை! - இல.பிரகாசம் மரத்தின் அருமை! - இல.பிரகாசம்
மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!! மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!!
தென்னை மரம் ஏறும் இயந்திரம் தென்னை மரம் ஏறும் இயந்திரம்
ட்விட்டர் என்ற ஆலமரம் ட்விட்டர் என்ற ஆலமரம்
உரமும் மரமும் உரமும் மரமும்
கருத்துகள்
07-Apr-2016 18:53:36 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமிக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.