LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய் படத்தில் தனது காதாபாத்திரம் குறித்து விவரிக்கிறார் சுதீப் !!

நடிகர் விஜய் தற்போது, சிம்புதேவன் இயக்கத்தில் மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுசாக ஒருவாரம் கூட ஆகவில்லை. அதற்குள் அப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.  


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.  அதுமட்டுமல்ல, நான் ஈ படப் புகழ் கன்னட நடிகர் சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் மாரீசன் படத்தில் நடிப்பது பற்றி பிரபல ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு சுதீப் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, 


இந்த படம் என்னைப்பொருத்தவரை ஒரு வித்தியாசமான படம். வெளிப்படையாக சொல்வதென்றால் இது ஒரு ஃபேன்டஸி படம். இப்படத்தில் மிகப்பெரிய ஒரு ராஜ்ஜியத்தின் ராணியாக ஸ்ரீதேவி  மேடம் நடிக்கிறார். அந்த ராஜ்ஜியத்தைக் கட்டிக்காக்கும் தளபதியாக நான் நடிக்கிறேன். 


 

உண்மையைச் சொல்லப்போனால் இப்படத்தில் நடிப்பதற்கு படக்குழுவினர் என்னை அப்பரோச் பண்ணியபோது ஆரம்பத்தில் என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் நடிக்க மறுத்துவிட்டேன். அவர்கள் வற்புறுத்தி கேட்டும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டு மாதமாக அந்த கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.  
ஒரு நடிகனாக என் மீது அவர்கள் நிறைய மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் கடைசியில் என் பிடிவாதத்தைத் தளர்த்தி, அந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன் 
இப்படத்தில் எனக்கு முழுக்க நெகட்டிவ் கேரக்டர் கிடையாது. அந்த கேரக்டருக்கென சில நல்ல குணங்களும் உண்டு. அதேபோல் தீய குணங்களும் உண்டு. ஒரு சாதாரண வில்லன் கதாபாத்திரமாக இது இருந்திருந்தால் என்னை அவர்கள் அணுகியிருக்கவே மாட்டார்கள் என பேட்டியில் கூறியிருக்கிறார் சுதீப்...

உண்மையைச் சொல்லப்போனால் இப்படத்தில் நடிப்பதற்கு படக்குழுவினர் என்னை அப்பரோச் பண்ணியபோது ஆரம்பத்தில் என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் நடிக்க மறுத்துவிட்டேன். அவர்கள் வற்புறுத்தி கேட்டும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டு மாதமாக அந்த கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.  


ஒரு நடிகனாக என் மீது அவர்கள் நிறைய மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் கடைசியில் என் பிடிவாதத்தைத் தளர்த்தி, அந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன் 


இப்படத்தில் எனக்கு முழுக்க நெகட்டிவ் கேரக்டர் கிடையாது. அந்த கேரக்டருக்கென சில நல்ல குணங்களும் உண்டு. அதேபோல் தீய குணங்களும் உண்டு. ஒரு சாதாரண வில்லன் கதாபாத்திரமாக இது இருந்திருந்தால் என்னை அவர்கள் அணுகியிருக்கவே மாட்டார்கள் என பேட்டியில் கூறியிருக்கிறார் சுதீப்...

 

by Swathi   on 14 Nov 2014  0 Comments
Tags: Mareechan   vijay   Sudeep   Simbudevan   சிம்புதேவன்   மாரீசன்   சுதீப்  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
கபாலிக்கு பிறகு விஜய் 60!! கபாலிக்கு பிறகு விஜய் 60!!
தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !! தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !!
தனி ஒருவன் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் !! தனி ஒருவன் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் !!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.