|
|||||
விஜய் படத்தில் தனது காதாபாத்திரம் குறித்து விவரிக்கிறார் சுதீப் !! |
|||||
நடிகர் விஜய் தற்போது, சிம்புதேவன் இயக்கத்தில் மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுசாக ஒருவாரம் கூட ஆகவில்லை. அதற்குள் அப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, நான் ஈ படப் புகழ் கன்னட நடிகர் சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாரீசன் படத்தில் நடிப்பது பற்றி பிரபல ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு சுதீப் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்த படம் என்னைப்பொருத்தவரை ஒரு வித்தியாசமான படம். வெளிப்படையாக சொல்வதென்றால் இது ஒரு ஃபேன்டஸி படம். இப்படத்தில் மிகப்பெரிய ஒரு ராஜ்ஜியத்தின் ராணியாக ஸ்ரீதேவி மேடம் நடிக்கிறார். அந்த ராஜ்ஜியத்தைக் கட்டிக்காக்கும் தளபதியாக நான் நடிக்கிறேன்.
உண்மையைச் சொல்லப்போனால் இப்படத்தில் நடிப்பதற்கு படக்குழுவினர் என்னை அப்பரோச் பண்ணியபோது ஆரம்பத்தில் என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் நடிக்க மறுத்துவிட்டேன். அவர்கள் வற்புறுத்தி கேட்டும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டு மாதமாக அந்த கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.
ஒரு நடிகனாக என் மீது அவர்கள் நிறைய மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் கடைசியில் என் பிடிவாதத்தைத் தளர்த்தி, அந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன்
இப்படத்தில் எனக்கு முழுக்க நெகட்டிவ் கேரக்டர் கிடையாது. அந்த கேரக்டருக்கென சில நல்ல குணங்களும் உண்டு. அதேபோல் தீய குணங்களும் உண்டு. ஒரு சாதாரண வில்லன் கதாபாத்திரமாக இது இருந்திருந்தால் என்னை அவர்கள் அணுகியிருக்கவே மாட்டார்கள் என பேட்டியில் கூறியிருக்கிறார் சுதீப்...
உண்மையைச் சொல்லப்போனால் இப்படத்தில் நடிப்பதற்கு படக்குழுவினர் என்னை அப்பரோச் பண்ணியபோது ஆரம்பத்தில் என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் நடிக்க மறுத்துவிட்டேன். அவர்கள் வற்புறுத்தி கேட்டும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டு மாதமாக அந்த கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். ஒரு நடிகனாக என் மீது அவர்கள் நிறைய மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் கடைசியில் என் பிடிவாதத்தைத் தளர்த்தி, அந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன் இப்படத்தில் எனக்கு முழுக்க நெகட்டிவ் கேரக்டர் கிடையாது. அந்த கேரக்டருக்கென சில நல்ல குணங்களும் உண்டு. அதேபோல் தீய குணங்களும் உண்டு. ஒரு சாதாரண வில்லன் கதாபாத்திரமாக இது இருந்திருந்தால் என்னை அவர்கள் அணுகியிருக்கவே மாட்டார்கள் என பேட்டியில் கூறியிருக்கிறார் சுதீப்...
|
|||||
by Swathi on 14 Nov 2014 0 Comments | |||||
Tags: Mareechan vijay Sudeep Simbudevan சிம்புதேவன் மாரீசன் சுதீப் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|