அரியலூரில் உள்ள கடல்படிம ஆய்வகத்தை தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க இந்திய புவியியல் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரியலூர் கடல்படிம ஆய்வக இயக்குனர் ஜெனரல் ஏ.சுந்தரமூர்த்தி சுந்தரமூர்த்தி கூறியதாவது, அதிகளவிலான கடல் படிமங்கள் அரியலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் அரியலூர் கடல்படிம ஆய்வகத்தை தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
|