|
||||||||
மருந்தில்லா வாழ்க்கை |
||||||||
சுலபமாய் கிடைப்பவைகள் மதிப்பு கொள்வதில்லை என்றுமே !
ஒற்றை செடியை நட்டு
வைத்து தினமும் முகம்
கழுவும் தண்ணீர் போதும்
மரமொன்றை உருவாக்க !
செலவு செய்யும் தண்ணீரை
மண் குழியில் இறக்கினாலே,
நிலத்தடி நீரை சேர்த்திடலாம்.
ஆக்ரமிப்பு செய்வோரும்,மணலை
அள்ளி விற்போரும்,மனது வைத்து
ஆற்று வழி தடங்களை ஒன்றும்
செய்யாமல் விட்டாலே தடையில்லாமல்
தண்ணீர் ஊருக்குள் வந்து செல்லுமே !
விலை உயர்ந்த ஆடையும்,
வசதியான வசிப்பிடமும்,மதிப்பு
மிக்க பதவியும்,வியாதியில்லா
உடலை நமக்கு கொடுப்பதில்லை.
சுத்தமான காற்றும் துய்மையான
தண்ணீரும்,மருந்தில்லா தானியமும்
நமக்கு மருந்தில்லா வாழ்க்கையை
எப்பொழுதும் தந்திடும்.
இயற்கையும் யானையும் ஒன்றுதான்
இரண்டையும் கையாள திறமை
வேண்டும். மதம் பிடித்த
யானை மிரண்டு தாண்டவம்
ஆடுகிறது, இயற்கையும் சில
நேரங்களில் மதம் பிடித்து
ஆடி விடுகிறது.பூகம்பமாகவோ
மழையாகவோ, புயலாகவோ வறட்சியாகவோ !
யானையை !
பாகன் அதன் போக்கிலே
வளர்ப்பது போல,
நாமும் இயற்கையின் போக்கிலே
வளர்ந்து கொள்ள முயற்சிக்க
வேண்டும்.
|
||||||||
Without medicine for life | ||||||||
by Dhamotharan.S on 08 Oct 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|