LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பிரசவ பாதிப்பால் கோமா நிலை: பெண்ணுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவு!

பிரசவ பாதிப்பால் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள பெண்ணுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு உயர்நீதிமன்ற  கிளை உத்தரவிட்டு உள்ளது.

குமரி மாவட்டம், பொன்மனை அருகே இடைக்கட்டான்களை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா (வயது 18).  இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருந்ததாவது:

 ‘‘என் தாய் ஷோபா கடந்த 2000ம் ஆண்டு குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் நான் பிறந்தேன். அப்போது எனது தாய்க்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டதில் பிரச்னை ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றவர் இன்னும் குணமடையவில்லை.

என் தந்தையோ விவாகரத்து பெற்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே தவறான சிகிச்சைக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தாய்க்கு தேவையான சிகிச்சை வழங்கவும், எனது கல்விச்செலவுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’

இவ்வாறு அதில் கூறி இருந்தார். 

இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (நீதி) தரப்பில், தாமாக முன் வந்து பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆசாரிபள்ளம் அரசு தலைமை மருத்துவமனை டீன் தலைமை யிலான மருத்துவ வல்லுநர் குழுவினர் அந்த பெண்ணுக்கு  சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர். 

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஷோபாவிற்கு தொடர் சிகிச்சை அளித்தாலும் பலன் கிடைக்காது. அவர் மீண்டு வர வாய்ப்பில்லை என கூறப்பட்டு இருந்தது.

 இதையடுத்து நீதிபதிகள், கோமாவிலுள்ள பெண்ணின் இறுதி வாழ்நாள் வரையில் மாற்றுத்திறனாளிக்குரிய திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உத்தரவிட்டனர்.

by Mani Bharathi   on 11 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.