LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெண் குழந்தை பிறந்தால் பிரசவ செலவு இலவசம் - குஜராத் மருத்துவரின் அதிரடி சலுகை !!

பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் பிரசவ செலவு முற்றிலும் இலவசம் என்று பெண் குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்தி வருகிறார் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர்.

 

குஜராத் மாநிலம் மேக்சனா கிராமத்தைச் சேர்ந்தவர் அல்பேஷ். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரஜாபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரஜாபதி சமீபத்தில் பிரசவத்துக்காக டாக்டர் தேஜாஸ் என்பவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு, பிரஜாபதிக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிரசவத்துக்காக அல்பேஷ் மருத்துவமனையில் கட்டி இருந்த 30 ஆயிரம் ரூபாயை அந்த மருத்துவமனையின் டாக்டர் திருப்பிக் கொடுத்துள்ளார்.

 

இது குறித்து டாக்டர் தேஜாஸ் கூறும்போது, ''இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 1,000 ஆணுக்கு 886 பெண் என்ற விகிதத்தில் உள்ளது. எனவே, பெண் குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்தவே சிகிச்சை செலவை திருப்பி அளித்து விட்டேன். அந்த தொகையை அந்த குழந்தையின் கல்வி செலவுக்கு பயன்படுத்துமாறு கூறியுள்ளேன்" என்று கூறினார்.

by Swathi   on 07 Feb 2014  0 Comments
Tags: Maternity Freebies   Gujarat Hospitals   பெண் குழந்தை   பிரசவ செலவு இலவசம்   பிரசவ செலவு        
 தொடர்புடையவை-Related Articles
பெண் குழந்தை பிறந்தால் பிரசவ செலவு இலவசம் - குஜராத் மருத்துவரின் அதிரடி சலுகை !! பெண் குழந்தை பிறந்தால் பிரசவ செலவு இலவசம் - குஜராத் மருத்துவரின் அதிரடி சலுகை !!
பெண் குழந்தைக்கு அப்பவானார் சிவகார்த்திகேயன் !! பெண் குழந்தைக்கு அப்பவானார் சிவகார்த்திகேயன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.