LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 

 

வரும், 15ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு துவங்க இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, கனடா நாட்டு பிரதமர், ஸ்டீபன் ஹார்பர் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தார். தமிழக அரசியல் தலைவர்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர் வற்புறுத்தலால், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இந்த வரிசையில் தற்போது மொரீஷியஸ் நாட்டு பிரதமரும் இணைந்துள்ளார்.

 

இந்த விவகாரம் குறித்து, மொரீஷியஸ் நாட்டு நாடாளமன்றத்தில், அந்நாட்டு பிரதமர் சந்திர ராம்கூலம் கூறியதாவது, இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்தன. போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஒரு நாட்டின் எல்லாவற்றையும் விட முதன்மையானது மனித உரிமைக்கு மதிப்பு கொடுப்பது தான். ஆனால், இலங்கையில் இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, காமன்வெல்த் மாநாட்டை மொரீஷியஸ் அரசு புறக்கணிப்பதாக ராம்கூலம் கூறியுள்ளார்.  

by Swathi   on 12 Nov 2013  0 Comments
Tags: Commonwealth Summit   Commonwealth Summit Boycott   Mauritian Prime Minister   Sri Lanka Commonwealth   இலங்கை காமன்வெல்த் மாநாடு   மொரீஷியஸ்   மொரீஷியஸ் பிரதமர்  
 தொடர்புடையவை-Related Articles
கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !! கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டனில் தமிழர்கள் பேரணி !! இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டனில் தமிழர்கள் பேரணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.