கதிர்நிரை பரப்பும் மணிமுடித் தேவர்கள் கனவிலும் காணாப் புனைவருந் திருவடி மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி எழுகதிர் விரிக்கும் திருமணி எடுத்து வரையாக் கற்புடன் நான்கெனப் பெயர்பெற்று (5)
ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள் மிடலொடு விரித்து சருக்கம் பாழி வீயா அந்தம் பதம்நிரை நாதம் மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கமென்று இனையவை விரித்துப் பலபொருள் கூறும் (10)
வேதம் முளைத்த ஏதமில் வாக்கால் குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த நிறைமதி நான்கின் நிகழ்ந்தன குறியும் குருவிந் தம்செள கந்திகோ வாங்கு சாதரங் கம்எனும் சாதிகள் நான்கும் (15)
தேக்கின் நெருப்பின் சேர்க்கின் அங்கையின் தூக்கின் தகட்டின் சுடர்வாய் வெயிலின் குச்சையின் மத்தகக் குறியின் ஓரத்தின் நெய்த்துப் பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு ஒத்த நற்குணம் உடையபன் னிரண்டும் (20)
கருகிநொய் தாதல் காற்று வெகுளி திருகல் முரணே செம்மண் இறுகல் மத்தகக் குழிவு காசம் இலைச்சுமி எச்சம் பொரிவு புகைதல் புடாயம் சந்தை நெய்ப்பிலி எனத்தரு பதினாறு (25)
முந்திய நூலில் மொழிந்தன குற்றமும் சாதகப் புட்கண் தாமரை கழுநீர் கோபம் மின்மினி கொடுங்கதிர் விளக்கு வன்னி மாதுளம் பூவிதை என்னப் பன்னுசா தரங்க ஒளிக்குணம் பத்தும் (30)
செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம் முயலின் சோரி சிந்துரம் குன்றி கவிர்அலர் என்னக் கவர்நிறம் எட்டும் குருவிந் தத்தில் குறித்தன நிறமும் அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு (35)
கோகிலக் கண்நீடு இலவலர் செம்பெனத் தருசெள கந்தி தன்நிறம் ஆறும் செங்கல் குராமலர் மஞ்சள் கோவை குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும் திட்டை ஏறு சிவந்த விதாயம் (40)
ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை மணிகோ கனகம் கற்பம் பாடி மாங்கி சகந்தி வளர்காஞ்சு உண்டையென்று ஆங்கொரு பதின்மூன்று அடைந்தன குற்றமும் இவையெனக் கூறிய நிறையருட் கடவுள் (45)
கூடல் கூடா குணத்தினர் போல முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள் அமுதவாய்க் கடுவிழிக் குறுந்தொடி நெடுங்குழல் பெருந்தோள் சிறுநகை முன்னையள் அல்லள் உலகியல் மறந்த கதியினர் போல (50)
நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின பகழிசெய் கம்மியர் உள்ளம் போல ஐம்புலக் கேளும் ஒருவாய்ப் புக்கன அதிர்உவர்க் கொக்கின் களவுயிர் குடித்த புகரிலை நெடுவேல் அறுமுகக் குளவன் (55)
தகரம் கமழும் நெடுவரைக் காட்சி உற்றனள் ஆதல் வேண்டும் சிற்றிடைப் பெருந்தோள் தேமொழி தானே. (58)
|