கடத்த சில மாதங்களாகவே, வறட்சியின் கடும் பிடியில் சிக்கி தவித்த மேட்டூர் அணை, கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக நேற்று 40வது முறையாக அதன் முழு கொள்ளளவும் நிரம்பியது. அணையில் இருந்து, வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடி உபரி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது.
மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் நிலையில் தற்போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கிறது. நாள்தோறும் 430 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கிறது.
தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணை நீரை நம்பித்தான் சாகுபடியில் இறங்கியுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரியாக கிளம்பும் ஆறு பல்வேறு கிளை நதிகளாக பிரிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் மண்ணையும், விவசாயிகளின் மனதையும் குளிர்விக்க இருக்கிறது.
|