|
|||||
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைகிறது ! சம்பா பயிர்கள் கருகும் அபாயம் ! |
|||||
தமிழகத்தில் சம்பா பயிர் சாகுபடி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.பருவ மழை பொய்த்து போனதால் மேட்டூர் அணை நீரை நம்பி விவசாயிகள் சம்பா நடவை சற்று தாமதமாக துவங்கினர்.தற்போது காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 400 கன அடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.சம்பா சாகுபடிக்கு ஜனவரி மாதம் முழுவதும் தண்ணீர் தேவைபடுகிறது.அனால் தற்போது மேட்டூர் அணையில் 10 நாட்களுக்கு போதுமான நீர் மட்டுமே உள்ளது.இதனால் காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. |
|||||
Mettur Water Level Decrease ! Delta Farmers Worry ! | |||||
|
|||||
by Swathi on 26 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|