இயக்குனர் கெளதம்மேனன் சிம்புவை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார்.
அதற்கு சட்டென்று மாறுது வானிலை என்றுகூட பெயர் வைத்தார்.
ஆனால், அதே டைட்டிலை ஏற்கனவே ஒரு நிறுவனம் சேம்பரில் பதிவு செய்து வைத்திருப்பதை அறிந்ததும், வேறு டைட்டீலை ஆலோசித்து வந்த கெளதம்மேனன்,. இப்போது கலங்கரை விளக்கம் என்ற படத்தில், காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று எம்.ஜிஆர் பாடிய அந்த பாடல் வரியை தனது படத்திற்கு டைட்டீலாக வைக்கப்போகிறாராம்.
இந்த டைட்டீல் சிம்புவுக்கும் ரொம்ப பிடித்து விட்டதாம்.
அதனால் விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார் கெளதம் மேனன்.
|