LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சத்யா நடெல்லா நியமனம் !!

கணினி உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO), சத்யா நடெல்லா என்ற இந்தியார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

1969ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்த சத்யா நடெல்லா, பள்ளிப்படிப்பை ஐதராபாத் பப்ளிக் பள்ளியில் முடித்தார். பின், மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பி.இ., (இ.சி.இ.,) பட்டம் பெற்றார். அதன்பின் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., ( கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பை நிறைவு செய்தார். சன் மைக்ரோ சிஸ்டம் என்ற நிறுவனத்தில் தனது பணியை துவக்கினார். பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படிப்பை முடிக்கும் போது, 1992ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் "புரோகிராம் மேனேஜர்' ஆக பொறுப்பேற்றார். இவர் தனது திறமையால் நிறுவனத்தில் மிக விரைவாக உயர்ந்தார். ஆன்லைன் சர்வீஸ் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் சீனியர் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். தற்போது சி.இ.ஓ., வாக பொறுப்பேற்றுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 38 வருடங்களாகி விட்டன. இந்தக் காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்புக்கு வந்த மூன்றாவது நபர் நடெல்லா என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர்.

by Swathi   on 04 Feb 2014  0 Comments
Tags: Microsoft CEO   Satya Nadella   CEO   MS CEO   Indian Satya Nadella   மைக்ரோசாப்ட்   மைக்ரோசாப்ட் சிஇஒ  
 தொடர்புடையவை-Related Articles
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சத்யா நடெல்லா நியமனம் !! மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சத்யா நடெல்லா நியமனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.