கணினி உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO), சத்யா நடெல்லா என்ற இந்தியார் நியமிக்கப்பட்டுள்ளார்.
1969ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்த சத்யா நடெல்லா, பள்ளிப்படிப்பை ஐதராபாத் பப்ளிக் பள்ளியில் முடித்தார். பின், மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பி.இ., (இ.சி.இ.,) பட்டம் பெற்றார். அதன்பின் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., ( கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பை நிறைவு செய்தார். சன் மைக்ரோ சிஸ்டம் என்ற நிறுவனத்தில் தனது பணியை துவக்கினார். பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படிப்பை முடிக்கும் போது, 1992ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் "புரோகிராம் மேனேஜர்' ஆக பொறுப்பேற்றார். இவர் தனது திறமையால் நிறுவனத்தில் மிக விரைவாக உயர்ந்தார். ஆன்லைன் சர்வீஸ் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் சீனியர் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். தற்போது சி.இ.ஓ., வாக பொறுப்பேற்றுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 38 வருடங்களாகி விட்டன. இந்தக் காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்புக்கு வந்த மூன்றாவது நபர் நடெல்லா என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர்.
|