LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள்!

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்துள்ளன. 

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும்.

பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரைக்கு, ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. 

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரீயா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் 4 அடி உயரம் உள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்ப்பது குறிப்பிடத் தக்கது .

மேலும் கொசு உள்ளான், கூழைக்கிடா, கரண்டி மூக்குநாரை, சிவப்புகால் உள்ளான்,

ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வரும் ஆர்டிக்டேன் (ஆலா) இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் என 247 வகைப் பறவைகளும் ஆண்டு தோறும் வந்து செல்கின்றன.

 பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது சைபீரியாவிலிருந்து பூநாரை உள்ளான், கரண்டிமூக்கு நாரை, சிறவிகள், இலங்கை பர்மாவில் இருந்து கூழைக்கிடா, செங்கால் நாரை, கடல்காகம் மற்றும் உள்ளூர் பறவைகளான கொக்கு, மடையன், சாம்பல்நாரை, பவளக்கால் உள்ளான் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பறைவகள் வந்து உள்ளன. 

இந்த பறவைகளை கோடியக்கரை பம்பு ஹவுஸ், நெடுந்தீவு, சிறுதலைகாடு ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் பறவைகளை பார்க்கலாம் எனவும், பறவைகளை பார்ப்பதற்கான வழிகாட்டி, தங்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சுற்றுலா பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்ற ஆண்டு பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை 30,805 சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். இந்த ஆண்டு சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கோடியக்கரை வனச்சரகர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

 இந்த பறவைகள் சரணாலயத்தின் சிறப்பு அம்சமாக கோடியக்கரையிலிருந்து பழந்தின்னி வவ்வால்கள் நாள்தோறும் இலங்கை அனுராதாபுரம் காட்டுப்பகுதிக்கு சுமார் 28 மைல் தூரத்தில் பறந்து சென்று பழங்களை தின்று நாள்தோறும் திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 01 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.