LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்!

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை என்று  தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "நடிகர் கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஆபத்து"என்றார். 

இது குறித்து கருத்து தெரிவித்த கமல், ராஜேந்திரபாலாஜி ஒரு தீய சக்தி என்றும், சப்பாணி குழந்தை என்று விமர்சித்த அமைச்சரை பெண்கள், குழந்தைகள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவரை பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணான சுசீலா பொன்னுசாமி என்பவர்  புகார் ஒன்றை அளித்தார். 

 "கமலின் கட்சி குறித்து சப்பாணி குழந்தை, அது வளர்ந்தால் நாட்டுக்கே ஆபத்து என கூறி மாற்றுத்திறனாளிகளை மேற்கோளிட்டு அநாகரிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். 

இது தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனதைக் காயப்படுத்தி, மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது. எனவே அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரி இருந்தார்.

இந்த நிலையில் தமது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனை விமர்சிக்கவே சப்பாணி என்று கூறியதாகவும், அது அவர் நடித்த கதாபாத்திரம் என்பதால் அதை பயன்படுத்தியதாகவும் கூறினார். 

மாற்றுத்திறனாளிகள் தெய்வத்தின் குழந்தைகள். அவர்களை காயப்படுத்தும் எண்ணம் இல்லை. ஆவின் நிறுவனத்தில் 15% மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது" என்றும் தெரிவித்தார். 

by Mani Bharathi   on 19 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.