தேவையானவை :
புதினா இலை - 2 கப் கொத்துமல்லி - 2 கப் இஞ்சி - ஒரு துண்டு பெரிய வெங்காயம் - 2 எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன் பூண்டு - 5 பல் புளி - சிறிது பச்சை மிளகாய் - 4 சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையானளவு
செய்முறை :
1.புதினா மற்றும் கொத்துமல்லியை தண்ணீரில் அலசி வைக்கவும்.
2.இஞ்சி ,பூண்டு ,வெங்காயம் ,பச்சை மிளகாய் அனைத்தையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
3.வாணலியில் எண்ணெய் விட்டு புதினா மற்றும் கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும்.
4.வதக்கியவற்றை சிறிது உப்பு, புளி வைத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
5.எண்ணெயில் சீரகம் தாளித்து இந்த சட்னியில் ஊற்றிக் கிளறி பரிமாறவும்.
|