|
|||||
மிரட்டல்-திரை விமர்சனம் |
|||||
நடிப்பு : வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன்
தெலுங்கில் வெளிவந்த தீ (Dhee) என்ற படத்தை மறுபடியும் தமிழில் ‘மிரட்டல்’ என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ். விஜயகாந்தை வைத்து இயக்கிய அரசாங்கம் என்ற படத்துக்குப் பிறகு சில ஆண்டு இடைவெளியில் அவர் இயக்கியுள்ள படம் இது.
மென்மையான வேடங்களில் நடித்து வந்த வினய், இதில் Action ஹீரோவாக நடித்துள்ளார். நடிப்பில் பெரிதாக கூறும்படி ஒன்றும் இல்லை.தங்கை சர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார, ஆனால் மெகா தாதா பிரபு. தன் நண்பனான பாண்டியராஜனின் மகன் வினய்யை தன்னிடமே அடியாளாக வைத்துக் கொள்கிறார்.
மற்றொரு தாதாவான பிரதீப் ராவத்தின் மகனை போட்டுத் தள்ளுகிறார் பிரபு. இதனால் பிரபுவின் தங்கையை கொல்ல அடியாட்களை ஏவுகிறார் பிரதீப். தங்கையைக் காக்கும் பொறுப்பை வினய்யிடம் ஒப்படைக்கிறார் பிரபு. காப்பாற்றும் பொறுப்பேற்ற வினய்யுடன் காதலில் விழுகிறார் சர்மிளா. பிரபுவைப் பார்க்கும் போது மட்டும் காதலை காட்டிக் கொள்வதில்லை. சர்மிளாவை வேறு மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்க பிரபு முயற்சி செய்ய, ஒரு நாள் ஓடிப் போய் பழனியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு வினய்யின் பெற்றோரும் உடந்தையாக நிற்கின்றனர். திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே பிரபுவின் எதிரிகள் சர்மிளாவை கொலை செய்ய முயற்சிக்கின்றனர், அதிலிருந்து காப்பாற்றுகிறார் வினய். காப்பாற்றி முடிக்கும்போது, சரியாக பிரபு வந்து நிற்கிறார்.
உடனே திருமணத்தை மறைத்து, தானே காப்பாற்றியதாக சொல்லிவிடுகிறார் வினய். தில்லுமுல்லு தொடர்கிறது. தானும் சர்மிளாவும் கணவன் மனைவி என்ற உண்மையை பிரபுவுக்கு சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ். |
|||||
by Swathi on 06 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|