LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஷங்கரை தொடர்ந்து மிஷ்கின்...

முன்னணி இயக்குனர்கள் தங்களது உதவி இயக்குனர்களின் படங்களை தயாரித்து உதவி புரியும் ஆரோக்கியமான பழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் தனது சிஷ்யர் காரத்திக் G க்ரிஷ் இயக்கிய கப்பல் படத்தை வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு அது பக்க பலமாய் அமைந்தது.

இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து பிசாசு படத்தின் வெற்றி தந்த உவகையில் இருக்கும் இயக்குனர் மிஷ்கின் தனது நெடு நாள் சிஷ்யர் வடிவேல் இயக்கும் ‘கள்ளப்படம்’ என்ற படத்தை 'Lone Wolf Productions' சார்பில் வெளியிடுகிறார்.

நல்ல தரமான படைப்புகளுக்கு துணை நிற்க ஆயத்தமாகி வரும் 'Lone Wolf Productionsன் முதல் வெளியீடாக வருகிறது ‘ கள்ளப்படம்' . “ நான் இந்த படத்தை பார்த்தேன்.  என்னை பொறுத்த வரையில் இப்படம் தமிழ் சினிமாவின்  தரமான படங்களின் பட்டியலில் இடம்பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று கூறி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர்  கே, ஒளிப்பதிவாளர்  ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், வடிவேல் ஆகியோரது இந்த கூட்டணி நம்பிக்கையின் அச்சாணியாய் விளங்குகிறது. சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு விருந்தாய் அமையும்.” என பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குனர் மிஷ்கின்.

by Swathi   on 13 Feb 2015  0 Comments
Tags: கள்ளப்படம்   மிஸ்கின்   வடிவேல்   Lone Wolf Productions   Miskin   Kalapadam     
 தொடர்புடையவை-Related Articles
ஷங்கரை தொடர்ந்து மிஷ்கின்... ஷங்கரை தொடர்ந்து மிஷ்கின்...
மிஸ்கினின் பிசாசு... பேய் படம் மட்டுமல்ல... மிஸ்கினின் பிசாசு... பேய் படம் மட்டுமல்ல...
மிஸ்கினுடன் கைகோர்க்கும் கமல் !!! மிஸ்கினுடன் கைகோர்க்கும் கமல் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.