கார்காலம் (mid august to mid october) என்பது நான்கு மாத {இளவேனில் முதுவேனில்} வெப்ப காலத்திற்குப் பின்பாக வரக்கூடிய குளிர் காற்று காலமாகும்.
நான்கு மாத கடும் வெப்பத்தினை நிலம் {பூமி} உள் வாங்கியிருக்கும். அதே போல் மக்கள்,உயிர்கள்,மரம்,செடி வகைகளும் வெப்பத்தை பெற்று அவற்றின் இயல்பு தன்மையினை இழந்திருக்கும்.
நான்கு மாத காலத்தில் உடலின் வன்மை சற்று குறைந்திருக்கும்.உடல் சோர்வுடன் சற்று மெலிவு {எடை குறைவு} ஏற்பட்டிருக்கும்.அக்காலங்களில் உரிய பழக்க வழக்கங்களைப் பின்பற்றியிருந்தால் இந்த மாற்றங்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
அப்படி பின்பற்றாதிருந்தால் கார்காலத்தின் தனி குணங்களும் உடலைப் பற்றி வேறு சில துன்பங்களும் ஏற்ப்படும்.
கார்காலத்தின் நிகழ்வுகள்:
பொதுவான வெப்ப காலத்தில் பூமியில் ஈரப்பதம் குறைந்து வறட்சியே மிகுந்திருக்கும்.ஆரம்ப கார் காலத்தில் பெய்யும் மழையினாலும் குளிர் காற்றினாலும் மண்ணின் மேற்பரப்பில் உள்ள வெப்பம் மேல் எழும்பும் குளிர் காற்றும் பூமியின் வெப்பமும் சேர்ந்து உடலைத்தாக்கும்.
நீரின் இனிப்பு தன்மை மாறி லேசான புளிப்புச் சுவையை அடையும்.மழைகாலம் தொடங்கி சில நாட்களான பின் தான் நீரின் புளிப்புத் தன்மை மாறும்.கார்கலத்தில் வடக்குதிசையிலிருந்து வாடைக்காற்று வீசும்.காற்றின் குளிர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும்.
கார்காலத்தின் உடல் மாற்றங்கள்:
பருவ மாற்றத்தினால் ஏற்ப்படும் குளிரை தாங்கிக்கொள்ள உயிர் ஆற்றலின் சூடு தோற்பகுதிக்கு செல்வதால் உடலை காக்கும் சூடு ஆற்றல் வன்மைகுறையும்.அதாவது அழல் என்ற உயிர் ஆற்றல்{விளக்கம் உயிர் என்ற தலைப்பின் கீழ் உள்ளது} தன் இயல்பு நிலையை விட்டு குறைந்தே செயல்படும்.இக்காலத்தில் சூடு ஆற்றல் குறைந்திருக்கும் போது வளி ஆற்றல் இயல்பாகவே அதிகரிக்கும்.எனவே கார்காலத் தொடக்கத்தில் உடலில் வளி [வாத] நோய்கள் உண்டாகும்.உடம்பின் செரிக்கும் தன்மை குறையும்.முதுவேனில் குறைவுபட்ட செரிக்கும் ஆற்றல் இக்காலத்தில் மேலும் குறையும்.பசியும் குறையும்.பசியும் செரிப்புத் தன்மையும் குறைவதற்கு பூமியில் இருந்து எழும்பக்கூடிய வெப்ப ஆவியும் குளிர்ந்த காற்றும் தான் காரணம். இந்த நிலையில் உடல் மாறுபாடுகளைச் சரியாகச் சீர் செய்ய வேண்டும்.இல்லாவிடில் உடலில் ஐயம் [நீர்,குளிர்] என்கிற உயிர் ஆற்றல் மாறுபாடடைந்து மூக்கு முதல் நுரையீரல் வரையுள்ள பகுதிகளில் கோழை சேர்ந்து தும்மல்,மூக்கடைப்பு,இருமல்,மார்பில் சளி,மூச்சுவிட சிரமம் போன்ற பல சுவாச நோய்களை அது உண்டாக்கும்.
மொத்தத்தில் உடலின் மூன்று உயிர் ஆற்றல்களும் தத்தம் அளவில் மாறுபாடு அடையும்.இக்காலத்தில் ஏற்ப்படும்.சில உடல் மாறுபாடுகளை கீழ்க்கண்ட பாடல் தெரிவிக்கின்றது.
"கார்காலக் குணந்தன்னைக் கருதியுரைத் திடக்கோளாய் காந்திகேடுந் தாகமறுங் காதலுமுண் டாகும் பார்மேவு களிப்பெய்து நித்திரையும் மேவும் பசிமந்தம் வாதமிக லாங்குளிருண் டாகும் சீர்மேவு நிழல்குணந்தான் மேனிப்பதைப் பெய்துஞ் சீர்மையுண்டாம் வாத முண்டாஞ் செத்மவலித் தனமா ஏர்மேவும் பசிமந்தந் தாகமுண் டாகும் எழில்வேறு படுமென்றா ரிசைப்புலவர் தாமே"
உடல் சூடு குறையும்.
தாகம் எடுக்காது.
மன மகழ்ச்சி உண்டாகும்.
அதிக உறக்கம் உண்டாகும்.
பசி மந்தம் உண்டாகும்.
வாதம் தொடர்பான மூட்டு வலிகள் இக்காலத்தில் அதிகமாகும்.
மூட்டு வீக்கமும் கூடும்.
என்பதே பாடலின் பொருளாகும்.
இது தவிர கார்காலத்தில் பிற கால மாறுபாடுகளில் உண்டாகக் கூடிய மன அழுத்தமும் உண்டாகும்.
கார்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்:
1. அதிகாலையில் துயிலேழுவது இக்காலத்தில் சற்று கடினமாக இருக்கும்.ஆனாலும் பிற காலங்களை போலவே துயிலெழும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
2. காலையில் பல் துலக்கும் பொடியுடன் இலவங்கம் [கிராம்பு] இருக்க வேண்டும்.[அல்லது பூங்கற்பூரம் பச்சைக் கற்பூரம் செர்த்துக்க் கொள்ளலாம்.
3. வாரம் இருமுறை அதிகாலையில் 2துளசி 2 மிளகு சேர்த்து சுவைத்து சாப்பிட வேண்டும் .
4.கண்டிப்பாக குளிர்ந்த நேரில் தான் குளிக்க வேண்டும்.துளசி,வேப்பிலை போன்ற மூலிகைகளைப் போட்டு ஊற விட்ட நீரிலும் குளிக்கலாம்.
5.எண்ணெய்க் குளியல் அவசியம். நலஎண்ணெயுடன் மிளகு ,இஞ்சி, சீரகம் போட்டுக் காய்ச்சிக் குளிக்க வேண்டும்.
6.முதுவேனில் காலத்தில் பேதி மருத்துவம் மேற்கொள்ளாதவர்கள் இக்காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
7. இக்காலத்தில் ஏற்படக்கூடிய பசி மந்த்தத்தை நீக்குவதற்கு சுக்கு,மிளகு,கிராம்பு,கல் உப்பு கலந்த பொடியினை மூன்று வேளையும் ஒரு கிராம் அளவிற்கு வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
8.காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் என்ற சித்தர் மொழியின் படி உண்டு வர சிறப்பான பலனை பெறலாம்.[விளக்கம் பின்பு காயகல்ப்பம் என்ற தலைப்பின் கீழ் விளக்கப்படும்]
9.மாலை வேளைகளில் ஆவி பிடித்தாலும்[நீராவி குளியல்,மூலிகை குளியல்] நறுமண மூலிகைகளை நுகர்தலும் [ஓமம்,பச்சை கற்பூரம் கலந்த கலவையை நுகர்தல்]உடலுக்கு வன்மையை தரும்.
10.இக்காலத்தில் இனிப்பு,புளிப்பு,உப்பு சுவை உடைய பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
11.நெய்ப்பும் [எண்ணெய் பசு நெய் கலந்த ] சூடும் உள்ள பொருட்கள் உடலுக்கு நன்மையை உண்டாக்கும்.
நலப்பயணம் தொடரும் . . . .
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |