|
||||||||
மூலம் ஒன்றே |
||||||||
முதன் முதலில் மனித இனத்திற்குத் தெய்வம் என்ற மதிப்பில் இருந்தது உணவு தான். பிறகு, உணவு நிலத்திலிருந்து தான் விளைகின்றது என்றறிந்த போது நிலத்தைத் தெய்வமாக மதித்தான், வணங்கினான். பிறகு நீர் இன்றி உணவுமில்லை, வாழ்வுமில்லையென்று கண்ட போது நீரையும் தெய்வமாகக் கருதினான். பின்னர் தான் நெருப்பின் மதிப்பையும் அதை அலையாக வீசும் சூரியனையும் மதிக்கத் தொடங்கினான்.
மேலும் பல்லாயிரம் தலைமுறைகள் சென்ற பின்னர் காற்றின் மதிப்பை உணர்ந்தான். காற்றையும் தெய்வமாக வணங்கினான். காற்றில் மூலத்துகளாக விளங்கும் விண்ணை உணரப் பல இலட்சம் தலைமுறைகள் சென்று விட்டன. சிந்திக்கச் சிந்திக்க அறிவு உயர்ந்தது. தோற்றங்கள் அனைத்தும் விண்ணின் கூட்டுத்தான் என்ற தெளிவு வந்தபோது விண்ணை விடப் பேரியக்க மண்டலத்தில் வேறு என்ன உள்ளது என்ற சிந்தனையில் எல்லையற்ற இறைவெளி அவன் அறிவுக்கு எட்டியது. வெளியிலிருந்து விண் தோன்றி இருக்குமா? அல்லது விண்ணிலிருந்து வெளி தோன்றியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.
இந்த அறிவு நிலைக்கு வருவதற்குள் இந்த நில உலகில் எத்தனையோ மாற்றஙகள் மனித வாழ்வில் நிகழ்ந்து விட்டன. முடிவாகக் கண்ட தெளிவு இறைவெளிதான் தெய்வம். அது அரூபமானது. எங்கும் நிறைந்தது. அதிலிருந்து தான் விண் முதல் அனைத்தும் தோன்றி அந்த இறைவெளியிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் வாழும் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான் என்ற கருத்துப் பரவியது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
முதன் முதலில் மனித இனத்திற்குத் தெய்வம் என்ற மதிப்பில் இருந்தது உணவு தான். பிறகு, உணவு நிலத்திலிருந்து தான் விளைகின்றது என்றறிந்த போது நிலத்தைத் தெய்வமாக மதித்தான், வணங்கினான். பிறகு நீர் இன்றி உணவுமில்லை, வாழ்வுமில்லையென்று கண்ட போது நீரையும் தெய்வமாகக் கருதினான். பின்னர் தான் நெருப்பின் மதிப்பையும் அதை அலையாக வீசும் சூரியனையும் மதிக்கத் தொடங்கினான்.
மேலும் பல்லாயிரம் தலைமுறைகள் சென்ற பின்னர் காற்றின் மதிப்பை உணர்ந்தான். காற்றையும் தெய்வமாக வணங்கினான். காற்றில் மூலத்துகளாக விளங்கும் விண்ணை உணரப் பல இலட்சம் தலைமுறைகள் சென்று விட்டன. சிந்திக்கச் சிந்திக்க அறிவு உயர்ந்தது. தோற்றங்கள் அனைத்தும் விண்ணின் கூட்டுத்தான் என்ற தெளிவு வந்தபோது விண்ணை விடப் பேரியக்க மண்டலத்தில் வேறு என்ன உள்ளது என்ற சிந்தனையில் எல்லையற்ற இறைவெளி அவன் அறிவுக்கு எட்டியது. வெளியிலிருந்து விண் தோன்றி இருக்குமா? அல்லது விண்ணிலிருந்து வெளி தோன்றியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.
இந்த அறிவு நிலைக்கு வருவதற்குள் இந்த நில உலகில் எத்தனையோ மாற்றஙகள் மனித வாழ்வில் நிகழ்ந்து விட்டன. முடிவாகக் கண்ட தெளிவு இறைவெளிதான் தெய்வம். அது அரூபமானது. எங்கும் நிறைந்தது. அதிலிருந்து தான் விண் முதல் அனைத்தும் தோன்றி அந்த இறைவெளியிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் வாழும் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான் என்ற கருத்துப் பரவியது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
|
||||||||
by Swathi on 17 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|