LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-107

 

3.107.திருநாரையூர் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சௌந்தரேசர். 
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை. 
3945 கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட
கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லா
னுமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த
வம்மா னடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந்தானிட
நாரை யூர்தானே
3.107.1
கடலில் தோன்றிய வெப்பம் மிகுந்த கடுமையான நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி, திருமேனியில் திரு வெண்ணீற்றினைப் பூசி, உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு மலையாகிய வில்லைத் தாங்கிக் கணைஎய்த பெருமான், தம்முடைய அடியார்கள் மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத் தொலைத்து மகிழ்பவர். இத்தகைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும். 
3946 விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம்
விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த
பெருமா னெரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந்
திருநாரை யூரானென்
றெண்ணுமி னும்வினை போகும்வண்ண
மிறைஞ்சுந் நிறைவாமே
3.107.2
ஆகாயத்தில் விளங்கும், மின்னல் போன்ற ஒளியுடைய சந்திரனையும், படப்புள்ளிகளையுடைய பாம்பினையும், விரிந்த கொன்றைமலரையும், கங்காதேவிக்கு முன்னே சடையிலணிந்த மிகவும் மகிழ்ந்த பெருமான், நெருப்பேந்தி ஆடுபவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை மனம், வாக்கு, காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள். உங்கள் வினைகள் தொலைந்துபோகும் வண்ணம் வணங்குங்கள். எல்லா நலன்களும் நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும். 
3947 தோடொரு காதொரு காதுசேர்ந்த
குழையா னிழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற
பிறையான் மறையோதி
நாடொரு காலமுஞ் சேரநின்றதிரு
நாரை யூரானைப் 
பாடுமி னீர்பழி போகும்வண்ணம்
பயிலு முயர்வாமே
3.107.3
சிவபெருமான் இடக் காதில் தோடும், வலக் காதில் குழையும் அணிந்துள்ளவர். மார்பில் பூணூல் அணிந்துள்ளவர். ஒரு காலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நிற்பவர். பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர்.வேதங்களை ஓதுபவர். ஒவ்வொரு காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து சேரும்படி வீற்றிருந் தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக. உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள். உங்கட்கு உயர்வு உண்டாகும். 
3948 3 வெண்ணில வஞ்சடை சேரவைத்து
விளங்குந் தலையேந்திப்
பெண்ணி லமர்ந்தொரு கூறதாய
பெருமா னருளார்ந்த
அண்ணன் மன்னியுறை கோயிலாகு
மணிநாரை யூர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள்
நடலை கரிசறுமே
3.107.4
வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து, விளங்குகின்ற பிரமகபாலத்தைக் கையிலேந்தி, உமா தேவியைத் தன்னுடம்பில் ஒரு கூறாகக் கொண்ட பெருமானும், அருள் நிறைந்து தலைவனுமாகிய சிவபெருமான் நிலையாக வீற்றிருந்தருளும் கோயிலுள்ள அழகிய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் சேர்ந்து இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். உங்கள் துன்பங்கள் நீங்கும். 
3949 வானமர் தீவளி நீர்நிலனாய்
வழங்கும் பழியாகும்
ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற
முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான்
றிருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா
கொடுவல் வினைதானே
3.107.5
ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது. அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப் பிறிதொரு வழியின்றி, அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக் கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற என் தந்தையும், தலைவனுமாவான். அப்பெருமானைச் சரணடையக் கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா. 
3950 கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங்
குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த
வழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன்றிரு
நாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கடம்மைப்
புணரும் புகறானே
3.107.6
சிவபெருமான் தலையில் கொக்கின் இறகையும், குளிர்ந்த பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர். எலும்பைப் பாம்போடு சேர்த்து இடுப்பில் கட்டி மகிழும் அழகர். இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தை அடைந்து, அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர்களிடத்துத் திருவருட்சத்தி பதியும். 
3951 ஊழியு மின்பமுங் காலமாகி
யுயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை
வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர்
நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும்
வகையின் விளைவாமே
3.107.7
சிவபெருமான் ஊழிக்காலமும், இன்பமும், காலங்களும் ஆகியவர். உயர்ந்த தவம் ஆகியவர். ஏழிசையின் பயனாக விளங்குபவர். வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள் செய்கின்ற வினையின் பயன்களை உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர். நாழிகை முதலிய சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர். இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திரநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் அருள் விளையாடல்களின் விளைவுகளேயாகும். 
3952 கூசமிலா தரக்கன் வரையைக்
குலுங்க வெடுத்தான்றோள்
நாசம தாகி யிறவடர்த்த
விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற
பெரியோ னிடம்போலும்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற
திருநாரை யூர்தானே
3.107.8
கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக் குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும்படி அடர்த்த திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான். நெஞ்சில் வஞ்சமில்லாத உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும்படியும், இடைவிடாது தியானிக்கும்படியும் நின்ற பெருமையுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தேசம் முழுவதும் புகழுகின்ற சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும். 
3953 பூமக னும்மவ னைப்பயந்த
ஆமள வுந்திரிந் தேத்திக்காண்ட
லறிதற் கரியானூர்
பாமரு வுங்குணத் தோர்களீண்டிப்
பலவும் பணிசெய்யும்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த
திருநாரை யூர்தானே
3.107.9
தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும், அவனைப் பெற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும், தங்களால் இயன்ற அளவு திரிந்து தேடியும், ஏத்தியும் காண்பதற்கு அரியவனாக விளங்கி சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், நீதி நூல்களில் சொல்லிய நற்குண, நற்செய்கை உடையவர்கள் கூடி, திருத்தொண்டுகள் பலவும் செய்யும், தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாரையூர் என்னும் திருத்தலமாகும். 
3954 வெற்றரை யாகிய வேடங்காட்டித்
திரிவார் துவராடை
உற்றரை யோர்க ளுரைக்குஞ்சொல்லை
யுணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான்
குழகன் றொழிலாரப்
பெற்றர வாட்டிவரும் பெருமான்றிரு
நாரை யூர்சேர்வே
3.107.10
ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும், மஞ்சட் காவியாடை போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற சொற்களை ஏற்க வேண்டா. குற்றமில்லாத கொள்கை உடைய எம் தலைவரும், இளமையானவரும், அடியவர்கட்கு அருள்புரியும் தொழிலையுடையவரும், அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, வழிபட்டு உய்வீர்களாக. 
3955 பாடிய லுந்திரை சூழ்புகலித்
திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத்
திருநாரை யூரான்மேல்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும்
பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கு
மவலக் கடல்தானே
3.107.11
அலைஓசையுடைய கடல்சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ் உடையதும், சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய பத்துப்பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய அடியார்களின் கடல்போன்ற பெருந்துன்பம் நீங்கும். 
திருச்சிற்றம்பலம்

3.107.திருநாரையூர் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சௌந்தரேசர். தேவியார் - திரிபுரசுந்தரியம்மை. 

3945 கடலிடை வெங்கடு நஞ்சமுண்டகடவுள் விடையேறிஉடலிடை யிற்பொடிப் பூசவல்லானுமையோ டொருபாகன்அடலிடை யிற்சிலை தாங்கியெய்தவம்மா னடியார்மேல்நடலைவி னைத்தொகை தீர்த்துகந்தானிடநாரை யூர்தானே3.107.1
கடலில் தோன்றிய வெப்பம் மிகுந்த கடுமையான நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி, திருமேனியில் திரு வெண்ணீற்றினைப் பூசி, உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு மலையாகிய வில்லைத் தாங்கிக் கணைஎய்த பெருமான், தம்முடைய அடியார்கள் மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத் தொலைத்து மகிழ்பவர். இத்தகைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும். 

3946 விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம்விரிபூ மலர்க்கொன்றைபெண்ணின்முன் னேமிக வைத்துகந்தபெருமா னெரியாடிநண்ணிய தன்னடி யார்களோடுந்திருநாரை யூரானென்றெண்ணுமி னும்வினை போகும்வண்ணமிறைஞ்சுந் நிறைவாமே3.107.2
ஆகாயத்தில் விளங்கும், மின்னல் போன்ற ஒளியுடைய சந்திரனையும், படப்புள்ளிகளையுடைய பாம்பினையும், விரிந்த கொன்றைமலரையும், கங்காதேவிக்கு முன்னே சடையிலணிந்த மிகவும் மகிழ்ந்த பெருமான், நெருப்பேந்தி ஆடுபவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை மனம், வாக்கு, காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள். உங்கள் வினைகள் தொலைந்துபோகும் வண்ணம் வணங்குங்கள். எல்லா நலன்களும் நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும். 

3947 தோடொரு காதொரு காதுசேர்ந்தகுழையா னிழைதோன்றும்பீடொரு கால்பிரி யாதுநின்றபிறையான் மறையோதிநாடொரு காலமுஞ் சேரநின்றதிருநாரை யூரானைப் பாடுமி னீர்பழி போகும்வண்ணம்பயிலு முயர்வாமே3.107.3
சிவபெருமான் இடக் காதில் தோடும், வலக் காதில் குழையும் அணிந்துள்ளவர். மார்பில் பூணூல் அணிந்துள்ளவர். ஒரு காலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நிற்பவர். பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர்.வேதங்களை ஓதுபவர். ஒவ்வொரு காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து சேரும்படி வீற்றிருந் தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக. உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள். உங்கட்கு உயர்வு உண்டாகும். 

3948 3 வெண்ணில வஞ்சடை சேரவைத்துவிளங்குந் தலையேந்திப்பெண்ணி லமர்ந்தொரு கூறதாயபெருமா னருளார்ந்தஅண்ணன் மன்னியுறை கோயிலாகுமணிநாரை யூர்தன்னைநண்ணல மர்ந்துற வாக்குமின்கள்நடலை கரிசறுமே3.107.4
வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து, விளங்குகின்ற பிரமகபாலத்தைக் கையிலேந்தி, உமா தேவியைத் தன்னுடம்பில் ஒரு கூறாகக் கொண்ட பெருமானும், அருள் நிறைந்து தலைவனுமாகிய சிவபெருமான் நிலையாக வீற்றிருந்தருளும் கோயிலுள்ள அழகிய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் சேர்ந்து இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். உங்கள் துன்பங்கள் நீங்கும். 

3949 வானமர் தீவளி நீர்நிலனாய்வழங்கும் பழியாகும்ஊனம ரின்னுயிர் தீங்குகுற்றமுறைவாற் பிறிதின்றிநானம ரும்பொரு ளாகிநின்றான்றிருநாரை யூரெந்தைகோனவ னைக்குறு கக்குறுகாகொடுவல் வினைதானே3.107.5
ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது. அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப் பிறிதொரு வழியின்றி, அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக் கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற என் தந்தையும், தலைவனுமாவான். அப்பெருமானைச் சரணடையக் கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா. 

3950 கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங்குலாய மலர்சூடிஅக்கர வோடரை யார்த்துகந்தவழகன் குழகாகநக்கம ருந்திரு மேனியாளன்றிருநாரை யூர்மேவிப்புக்கம ரும்மனத் தோர்கடம்மைப்புணரும் புகறானே3.107.6
சிவபெருமான் தலையில் கொக்கின் இறகையும், குளிர்ந்த பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர். எலும்பைப் பாம்போடு சேர்த்து இடுப்பில் கட்டி மகிழும் அழகர். இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தை அடைந்து, அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர்களிடத்துத் திருவருட்சத்தி பதியும். 

3951 ஊழியு மின்பமுங் காலமாகியுயருந் தவமாகிஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கைவினையின் புணர்ப்பாகிநாழிகை யும்பல ஞாயிறாகிநளிர்நாரை யூர்தன்னில்வாழியர் மேதகு மைந்தர்செய்யும்வகையின் விளைவாமே3.107.7
சிவபெருமான் ஊழிக்காலமும், இன்பமும், காலங்களும் ஆகியவர். உயர்ந்த தவம் ஆகியவர். ஏழிசையின் பயனாக விளங்குபவர். வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள் செய்கின்ற வினையின் பயன்களை உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர். நாழிகை முதலிய சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர். இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திரநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் அருள் விளையாடல்களின் விளைவுகளேயாகும். 

3952 கூசமிலா தரக்கன் வரையைக்குலுங்க வெடுத்தான்றோள்நாசம தாகி யிறவடர்த்தவிரலான் கரவாதார்பேசவி யப்பொடு பேணநின்றபெரியோ னிடம்போலும்தேசமு றப்புகழ் செம்மைபெற்றதிருநாரை யூர்தானே3.107.8
கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக் குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும்படி அடர்த்த திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான். நெஞ்சில் வஞ்சமில்லாத உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும்படியும், இடைவிடாது தியானிக்கும்படியும் நின்ற பெருமையுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தேசம் முழுவதும் புகழுகின்ற சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும். 

3953 பூமக னும்மவ னைப்பயந்தஆமள வுந்திரிந் தேத்திக்காண்டலறிதற் கரியானூர்பாமரு வுங்குணத் தோர்களீண்டிப்பலவும் பணிசெய்யும்தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்ததிருநாரை யூர்தானே3.107.9
தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும், அவனைப் பெற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும், தங்களால் இயன்ற அளவு திரிந்து தேடியும், ஏத்தியும் காண்பதற்கு அரியவனாக விளங்கி சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், நீதி நூல்களில் சொல்லிய நற்குண, நற்செய்கை உடையவர்கள் கூடி, திருத்தொண்டுகள் பலவும் செய்யும், தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாரையூர் என்னும் திருத்தலமாகும். 

3954 வெற்றரை யாகிய வேடங்காட்டித்திரிவார் துவராடைஉற்றரை யோர்க ளுரைக்குஞ்சொல்லையுணரா தெழுமின்கள்குற்றமி லாததோர் கொள்கையெம்மான்குழகன் றொழிலாரப்பெற்றர வாட்டிவரும் பெருமான்றிருநாரை யூர்சேர்வே3.107.10
ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும், மஞ்சட் காவியாடை போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற சொற்களை ஏற்க வேண்டா. குற்றமில்லாத கொள்கை உடைய எம் தலைவரும், இளமையானவரும், அடியவர்கட்கு அருள்புரியும் தொழிலையுடையவரும், அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, வழிபட்டு உய்வீர்களாக. 

3955 பாடிய லுந்திரை சூழ்புகலித்திருஞான சம்பந்தன்சேடிய லும்புக ழோங்குசெம்மைத்திருநாரை யூரான்மேல்பாடிய தண்டமிழ் மாலைபத்தும்பரவித் திரிந்தாகவாடிய சிந்தையி னார்க்குநீங்குமவலக் கடல்தானே3.107.11
அலைஓசையுடைய கடல்சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ் உடையதும், சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய பத்துப்பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய அடியார்களின் கடல்போன்ற பெருந்துன்பம் நீங்கும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.