LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-84

 

3.084.திருப்புறவம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
3701 பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர
வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழறொழு
மடியவர்
நண்ணிய பிணிகெட வருள்புரி பவர்நணு
குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலி
புறவமமே
3.084.1
சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப் பாகமாகக் கொண்ட வடிவமுடையவர். பெருக்கெடுக்கும் கங்கை நீரோடு, பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர். விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர். தம் திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து அருள்புரிபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த பதியாவது, புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3702 3702 கொக்குடை யிறகொடு பிறையொடு குளிர்சடை
முடியினர்
அக்குடை வடமுமொ ரரவமு மலரரை
மிசையினில்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை
மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ்
புறவமே
3.084.2
கொக்கின் இறகோடும், பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான். எலும்பு மாலை அணிந்தவர். பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர். திசைகளையே ஆடையாகக் கொண்ட உருவினர். அவர் மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3703 கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை
யுமையொரு
பங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொ
டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவ
ருறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர்
புறவமே
3.084.3
வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும், வரிகளையுடைய வளையல்களையும், இளமை வாய்ந்த முலைகளையும் உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான். அவர் மழுவோடு, மானையும் கரத்தில் ஏந்தியவர், இடப வாகனமுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல் பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க, அதில் மூழ்காது அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3704 மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு
மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது
விலகினார்
சாதக வுருவியல் கானிடை யுமைவெரு
வுறவரு
போதக வுரியதண் மருவின ருறைபதி
புறவமே
3.084.4
பெரிய தவம் செய்த மறையவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர் விலகும் படி செய்தவரும், பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும் படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3705 காமனை யழல்கொள விழிசெய்து கருதலா
கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியவிறை
தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ
டொளிகெழு
பூமக னலரொடு புனல்கொடு வழிபடு
புறவமே
3.084.5
சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர். பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும் புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர். அவர் வீற்றிருந்தருளும் தலமாவது, வேள்வி வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதி, பிற வாத்தியங்கள் ஒலிக்க, தீபமேற்றிப் பிரமன், மலரும், நீரும் கொண்டு வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3706 சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய,
தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி
பேணிட
முன்னைய முதல்வினை யறவரு ளினருறை
முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி
புறவமே
3.084.6
இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க தோத்திரங்களைச் சொல்பவர்களும், வேதங்கள் கடைப்பிடிக்கும்படி கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும், வேதத்தின் பிற்பகுதியான உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும் வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும், தம் திருவடிகளைப் போற்றி வழிபட, அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் ஆணவம், கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது, பொன் முடிப்புப் போன்ற புன்னையரும்பு, பொதியவிழ்வது போல மலர, அதிலிருந்து பொன் போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3707 வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி
படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி
பெருமையர்
எரிதரு முருவின ரிமையவர் தொழுவதொ
ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி
புறவமே
3.084.7
சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர். பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர். யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத் திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையையுடையவர். எரிபோல் மிளிர்கின்ற சிவந்த மேனியுடையவர். தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர். இத்தகைய சிவபெருமான் பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3708 வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை
வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது
நெரிவுற
ஒசிதர வொருவிர னிறுவின ரொளிவளர்
வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவ ருறைபதி
புறவமே
3.084.8
வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித் துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும், ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3709 தேனக மருவிய செறிதரு முளரிசெய்
தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை
யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனு
மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி
புறவமே
3.084.9
உள்ளிடத்தில் தேன் பொருந்திய, இதழ்கள் பல செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து, சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைக்கும் பிரமனும், ஏழுவகையாக அமைந்த வானகம், மலை, கடல், நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற்கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3710 கோசர நுகர்பவர் கொழுகிய துவரன
துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு
மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த
முறைபதி
பூசுரர் மறைபயி னிறைபுக ழொலிமலி
புறவமே
3.084.10
நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக் கொள்பவர்களும், துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் திருச்சிற்றம்பலம் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்ற முடையவர்கள். பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள் சமணர்கள், இவ்விருவகை நீசர்களை விட்டு, சிவபெருமானைத் தியானியுங்கள். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, இப் பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 
3711 போதியல் பொழிலணி புறவநன் னகருறை
புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு
விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள
வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு
பிறவியே
3.084.11
மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான சிவபெருமானைப் போற்றி, அந்தணர்களின் தலைவனும், மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர். 
திருச்சிற்றம்பலம்

3.084.திருப்புறவம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

3701 பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விரவியபிறைக்கண்ணியர் கடுநடை விடையினர் கழறொழுமடியவர்நண்ணிய பிணிகெட வருள்புரி பவர்நணுகுயர்பதிபுண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலிபுறவமமே3.084.1
சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப் பாகமாகக் கொண்ட வடிவமுடையவர். பெருக்கெடுக்கும் கங்கை நீரோடு, பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர். விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர். தம் திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து அருள்புரிபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த பதியாவது, புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3702 3702 கொக்குடை யிறகொடு பிறையொடு குளிர்சடைமுடியினர்அக்குடை வடமுமொ ரரவமு மலரரைமிசையினில்திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலைமகளொடும்புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ்புறவமே3.084.2
கொக்கின் இறகோடும், பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான். எலும்பு மாலை அணிந்தவர். பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர். திசைகளையே ஆடையாகக் கொண்ட உருவினர். அவர் மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3703 கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலையுமையொருபங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொடிரலைமெய்தங்கிய கரதல முடையவர் விடையவருறைபதிபொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர்புறவமே3.084.3
வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும், வரிகளையுடைய வளையல்களையும், இளமை வாய்ந்த முலைகளையும் உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான். அவர் மழுவோடு, மானையும் கரத்தில் ஏந்தியவர், இடப வாகனமுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல் பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க, அதில் மூழ்காது அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3704 மாதவ முடைமறை யவனுயிர் கொளவருமறலியைமேதகு திருவடி யிறையுற வுயிரதுவிலகினார்சாதக வுருவியல் கானிடை யுமைவெருவுறவருபோதக வுரியதண் மருவின ருறைபதிபுறவமே3.084.4
பெரிய தவம் செய்த மறையவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர் விலகும் படி செய்தவரும், பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும் படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3705 காமனை யழல்கொள விழிசெய்து கருதலாகடிமதில்தூமம துறவிறல் சுடர்கொளு வியவிறைதொகுபதிஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொடொளிகெழுபூமக னலரொடு புனல்கொடு வழிபடுபுறவமே3.084.5
சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர். பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும் புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர். அவர் வீற்றிருந்தருளும் தலமாவது, வேள்வி வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதி, பிற வாத்தியங்கள் ஒலிக்க, தீபமேற்றிப் பிரமன், மலரும், நீரும் கொண்டு வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3706 சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய,தொழிலினர்பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடிபேணிடமுன்னைய முதல்வினை யறவரு ளினருறைமுதுபதிபுன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணிபுறவமே3.084.6
இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க தோத்திரங்களைச் சொல்பவர்களும், வேதங்கள் கடைப்பிடிக்கும்படி கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும், வேதத்தின் பிற்பகுதியான உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும் வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும், தம் திருவடிகளைப் போற்றி வழிபட, அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் ஆணவம், கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது, பொன் முடிப்புப் போன்ற புன்னையரும்பு, பொதியவிழ்வது போல மலர, அதிலிருந்து பொன் போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3707 வரிதரு புலியத ளுடையினர் மழுவெறிபடையினர்பிரிதரு நகுதலை வடமுடி மிசையணிபெருமையர்எரிதரு முருவின ரிமையவர் தொழுவதொரியல்பினர்புரிதரு குழலுமை யொடுமினி துறைபதிபுறவமே3.084.7
சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர். பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர். யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத் திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையையுடையவர். எரிபோல் மிளிர்கின்ற சிவந்த மேனியுடையவர். தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர். இத்தகைய சிவபெருமான் பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3708 வசிதரு முருவொடு மலர்தலை யுலகினைவலிசெயும்நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபதுநெரிவுறஒசிதர வொருவிர னிறுவின ரொளிவளர்வெளிபொடிபொசிதரு திருவுரு வுடையவ ருறைபதிபுறவமே3.084.8
வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித் துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும், ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3709 தேனக மருவிய செறிதரு முளரிசெய்தவிசினில்ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடையொருவனும்வானகம் வரையக மறிகடல் நிலனெனுமெழுவகைப்போனக மருவின னறிவரி யவர்பதிபுறவமே3.084.9
உள்ளிடத்தில் தேன் பொருந்திய, இதழ்கள் பல செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து, சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைக்கும் பிரமனும், ஏழுவகையாக அமைந்த வானகம், மலை, கடல், நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற்கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3710 கோசர நுகர்பவர் கொழுகிய துவரனதுகிலினர்பாசுர வினைதரு பளகர்கள் பழிதருமொழியினர்நீசரை விடுமினி நினைவுறு நிமலர்தமுறைபதிபூசுரர் மறைபயி னிறைபுக ழொலிமலிபுறவமே3.084.10
நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக் கொள்பவர்களும், துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் திருச்சிற்றம்பலம் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்ற முடையவர்கள். பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள் சமணர்கள், இவ்விருவகை நீசர்களை விட்டு, சிவபெருமானைத் தியானியுங்கள். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, இப் பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும். 

3711 போதியல் பொழிலணி புறவநன் னகருறைபுனிதனைவேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழுவிரகினன்ஓதிய வொருபது முரியதொ ரிசைகொளவுரைசெயும்நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தருபிறவியே3.084.11
மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான சிவபெருமானைப் போற்றி, அந்தணர்களின் தலைவனும், மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.