LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- மற்றவர்கள்

மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது

மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது

    ஒருவர் கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில் பக்திப் பழமாக உட்கார்ந்திருப்பார். அவர், ‘எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களிலிருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை’ என்றபடியே இருப்பார்.

    ஒருநாள் கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி. இதைக் கேட்டதும் ‘நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே’ என்று கேட்டார் சந்நியாசி. ‘நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா, வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை. அவர்களுக்குக் கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா… அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்’ என்றார் ஆசாமி. சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.

    ஆண்டுகள் ஓடின. ஒருநாள்… கோயிலுக்கு வந்தார் சந்நியாசி. அதே சந்நியாசி, அதே பெட்டிக்கடை, அதே ஆசாமி. ‘எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களிலிருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை…..அதே புலம்பல். சந்நியாசி மெல்லப் புன்னகைத்தபடி, ‘சரி…இப்போதாவது புறப்படேன்’ என்றார். ‘பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா என் கவலையெல்லாம் தீர்ந்திடும்’ என்று விவரித்தார் நம்ம ஆள்.

    சில ஆண்டுகளுக்குப் பிறகு சந்நியாசி வந்தார். ‘எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களிலிருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை’….வழக்கம் போல் கேட்டது குரல்.. ‘இப்போதாவது வருகிறாயா?...வழக்கம் போல் கேட்டார் சந்நியாசி. ‘கோர்ட்ல கேஸ் இருக்கு, வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்’ பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி.

    ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. கடையிலிருந்தவர், ‘சாமி…. எங்க அப்பாதான் அவரு. எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள் நெஞ்சு வலின்னவரு, பொட்டுனு போயிட்டாரு. அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா, நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ..’ கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன்.

    இதைக்கேட்ட சந்நியாசி, ‘உங்க அப்பன் எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கான். அதோ…அங்கே பார்….அதென்ன?...என்றார் சந்நியாசி. ‘அது நாய், இங்கேதான் சுத்திக்கிட்ட இருக்கு’ என்று பதிலுரைத்தார் நம்மவரின் மகன். அதற்குச் சந்நியாசி, ‘அதான் உங்க அப்பன். இப்ப பாரு,’ என்றவர், கையைத் தட்டினார். அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயி்ன் தலையைத் தட்டினார். உடனே அது ‘எனக்கு ஆசையே இல்லை…’ எனப் பேசத் துவங்கியது. ‘அடேய்…என்னோட வந்துடறியா?...’ என்றார் சந்நியாசி. ‘சாமி ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதைச் சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க. கடையைச் சரியா பூட்டாமலே போயிடுறாங்க. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்’. இப்படி நாய் சொன்னதும், ‘கடகட’வெனச் சிரித்தார் சந்நியாசி.

    பிறகு அவர் சொன்னார்….’அறியாமையில் சுகம் கண்டவர்களுக்கு ஆன்ம விடுதலை எப்படிக் கிடைக்கும்?’ இன்றைக்கு ஆலயங்களைத் தேடிப் போகிற அன்பர்கள், முதலில் அறியாமை சுகத்திலிருந்து விடுபட வேண்டும்…பிறகு ஆன்மிக சுகத்தை அடையாளம் காண வேண்டும் என்றார்.

by Lakshmi G   on 04 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
இறையன்பும் சிந்தனை வளமும் இறையன்பும் சிந்தனை வளமும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.