LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அவ்வையார் நூல்கள்

மூதுரை

 

கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
நூல்
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால். 1
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான். 6
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 7
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11
மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம். 13
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம். 15
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு. 17
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். 19
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு. 20
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும். 21
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 26
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27
சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று? 28
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம். 29
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30
மூதுரை முற்றிற்று.

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு.

நூல்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்றுதளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்தலையாலே தான் தருதலால். 1
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்நீர் மேல் எழுத்துக்கு நேர். 2
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்இன்னா அளவில் இனியவும்- இன்னாதநாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமேஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்குசுட்டாலும் வெண்மை தரும். 4
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றிஎடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்தஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்பருவத்தால் அன்றிப் பழா. 5
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்தளர்ந்து விளையுமோ தான். 6
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்றநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்குலத்து அளவே ஆகும் குணம். 7
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்கநல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடுஇணங்கி இருப்பதுவும் நன்று. 8
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்றதீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடுஇணங்கி இருப்பதுவும் தீது. 9
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டுஎல்லார்க்கும் பெய்யும் மழை. 10
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றிஏற்ற கருமம் செயல். 11
மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிதுமண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்உண்ணீரும் ஆகி விடும். 12
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவேநீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறியமாட்டாதவன் நன் மரம். 13
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழிதானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி. 14
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரிஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்கல்லின் மேல் இட்ட கலம். 15
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்வாடி இருக்குமாம் கொக்கு. 16
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவேஒட்டி உறவார் உறவு. 17
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்றுஅல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரியபொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்நாழி முகவாது நானாழி-தோழிநிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்விதியின் பயனே பயன். 19
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டாஉடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவாமாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்அம் மருந்து போல் வாரும் உண்டு. 20
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லைஇல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்புலி கிடந்த தூறாய் விடும். 21
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்முற்பவத்தில் செய்த வினை. 22
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்துநீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமேசீர் ஒழுகு சான்றோர் சினம். 23
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலாமூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்காக்கை உகக்கும் பிணம். 24
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்கரவிலா நெஞ்சத் தவர். 25
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 26
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லியவாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமேஇல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27
சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்மனம் சிறியர் ஆவரோ மற்று? 28
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்லஉருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தைஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்துபோம் போது அவளோடும் போம். 29
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரைஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்துமறைக்குமாம் கண்டீர் மரம். 30


மூதுரை முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.