|
|||||
2013 ல் தமிழ் சினிமாவில் அதிக பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார் !! |
|||||
2013ம் வருடத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிக பாடல் எழுதியவர்கள் வரிசையில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் முதலிடம் பிடித்துள்ளார்.
நா.முத்துக்குமார் இந்த வருடத்தில் மட்டும், 34 படங்களில் 106 பாடல்கள் எழுதியுள்ளார். இதில் 10 படங்களில் அனைத்துப்பாடல்களையும் இவரே எழுதியிருப்பது இன்னொரு சாதனை. இவைதவிர, தற்போது 97 படங்களுக்கு இவர் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். அதில் 31 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதுகிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப்பயணம் பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.
நா.முத்துக்குமார் எழுதிய இந்த வருடத்திய சூப்பர்ஹிட்டுகள் இதோ,
தங்கமீன்கள் - ஆனந்தயாழை மீட்டுகிறாய்,
தலைவா - வாங்கன்ன வணக்கங்கன்ன, யார் இந்த சாலையோரம்,
ராஜாராணி - சில்லென ஒரு மழைத்துளி,
உதயம் என்.ஹெச்-4 - யாரோ இவன்,
ஆல் இன் ஆல் அழகுராஜா - உன்னப்பாத்த நேரம் ............. |
|||||
by Swathi on 26 Dec 2013 0 Comments | |||||
Tags: நா.முத்துகுமார் தமிழ் பாடல் ஆசிரியர் சினிமா பாடல்கள் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் Na Muthukumar Writer Na Muthukumar Na Muthukumar Songs | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|