|
|||||
முடக்கத்தான் கீரை இட்லி |
|||||
தேவையானவை : இட்லி அரிசி - 3 கப், முழு உளுந்து - அரை கப், முடக்கத்தான் கீரை (பறித்தது) - 2 கப், வெந்தயம் - ஒரு கைப்பிடி, வாழை இலை - 1, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து வைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை அகலமாக கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். இட்லித் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். பத்து நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்... சுடச்சுட சத்தான முடக்கத்தான் இட்லி தயார். |
|||||
by Swathi on 21 May 2014 2 Comments | |||||
Tags: முடக்கத்தான் கீரை முடக்கத்தான் கீரை இட்லி இட்லி Mudakathan Keerai Idli Mudakathan Keerai Idli | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|