LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

முகநூலை முகநூல் என்றும் சொல்லலாம். முகனூல் என்றும் சொல்லலாம்..

 

முகநூல் என்பதை எவ்வளவு துல்லியமாக உச்சரிக்க முயன்றாலும் அது ‘முகனூல்’ என்றே ஒலிக்கும். ஏன் ?
முகம்+நூல், முகம் என்பதில் உள்ள மகர ஈற்று மெய் ‘ம்’ கெட்டு முகநூல் (முகநக நட்பது, முகவரி) என்று புணர்வதுதானே சரி ? முகனூல் எப்படிச் சரியாகும் ? நல்ல கேள்வி.
மகர ஈற்று மெய் - ‘ம்’ என்று முடியும் பெயர்ச்சொற்களில் ம் என்ற எழுத்துக்குப் பதிலாக ன் என்ற மெய்யெழுத்து இடம்பெறும். நலம் என்பதை நலன் எனலாம், திறம் என்பதைத் திறன் எனலாம், வளம் என்பதை வளன் எனலாம், கலம் என்பதைக் கலன் எனலாம். அதுபோலவே முகம் என்பதை முகன் எனலாம்.
சொல்லின் கடைசி எழுத்தாக இருக்கவேண்டியதற்கு மாற்றாக வேறு எழுத்து இடம்பெற்றால் அது கடைப்போலி எனப்படும். முகத்திற்குக் கடைப்போலியான முகன் என்ற சொல்லோடு நூல் சேர்ந்தால் என்னவாகும் ? முகன் + நூல் = முகனூல். (தன்+நலம் = தன்னலம் ஆவதுபோல).
பின்குறிப்பு : நான் பேஸ்புக் என்றேதான் சொல்வேன் என்பவர்களுக்கு இச்செய்தி மறைந்து தோன்றட்டும் ! 
நன்றி : கவிஞர் மகுடேசுவரன்

முகநூல் என்பதை எவ்வளவு துல்லியமாக உச்சரிக்க முயன்றாலும் அது ‘முகனூல்’ என்றே ஒலிக்கும். ஏன் ?


முகம்+நூல், முகம் என்பதில் உள்ள மகர ஈற்று மெய் ‘ம்’ கெட்டு முகநூல் (முகநக நட்பது, முகவரி) என்று புணர்வதுதானே சரி ? முகனூல் எப்படிச் சரியாகும் ? நல்ல கேள்வி.

மகர ஈற்று மெய் - ‘ம்’ என்று முடியும் பெயர்ச்சொற்களில் ம் என்ற எழுத்துக்குப் பதிலாக ன் என்ற மெய்யெழுத்து இடம்பெறும். நலம் என்பதை நலன் எனலாம், திறம் என்பதைத் திறன் எனலாம், வளம் என்பதை வளன் எனலாம், கலம் என்பதைக் கலன் எனலாம். அதுபோலவே முகம் என்பதை முகன் எனலாம்.


சொல்லின் கடைசி எழுத்தாக இருக்கவேண்டியதற்கு மாற்றாக வேறு எழுத்து இடம்பெற்றால் அது கடைப்போலி எனப்படும். முகத்திற்குக் கடைப்போலியான முகன் என்ற சொல்லோடு நூல் சேர்ந்தால் என்னவாகும் ? முகன் + நூல் = முகனூல். (தன்+நலம் = தன்னலம் ஆவதுபோல).


பின்குறிப்பு : நான் பேஸ்புக் என்றேதான் சொல்வேன் என்பவர்களுக்கு இச்செய்தி மறைந்து தோன்றட்டும் ! 


நன்றி : கவிஞர் மகுடேசுவரன்

 

by Swathi   on 26 Nov 2014  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
13-Apr-2015 07:47:07 ரஜினி கார்த்திக் said : Report Abuse
கருத்து கூற விருப்பம் இல்லை. நான் பிறகு வேண்டுமானால் முயற்சி செய்கிறேன்.
 
05-Feb-2015 10:34:55 சோ.சுந்தரவடிவேல் said : Report Abuse
உச்சரிப்பின் வழியாகவே சொற்களின் எழுத்துகள் அமைகிறது என்பதற்கு மிகச் சிறந்த விளக்கம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.