LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

முழுப் பயணம் செய்வோம் வா - பாவலர் கருமலைத்தமிழாழன்

அருமையாக வாய்த்திட்ட வாழ்க்கை தன்னை
அன்பான மனைவியொடும் குழந்தை யோடும்
பெருமைதரும் வழியினிலே வாழ்ந்தி டாமல்
பேரழிவைத் தரும்மதுவிற் கடிமை யாகி
வருவாயை அதிலிழந்து குடும்பம் தன்னை
வறுமையிலே துடிதுடிக்க வாட விட்டும்
உருவான நோயினிலே சிலரோ இங்கே
உயிர்ப்பயணம் பாதியிலே முடிக்கின் றார்கள் !

வெண்சுருட்டால் வரும்நோய்தான் என்ற றிந்தும்
வெளித்தெருவில் வீட்டிற்குள் புகையி ழுத்துக்
கண்சுற்றி கருவளையம் காச நோயும்
கணையம்தான் பாதிக்க உடலும் வீங்க
மண்மீதில் வாழ்வதற்காய்க் கிடைத்த வாழ்வில்
மரணத்தைப் பாதியிலே அழைத்து வந்து
கண்முன்னே கிளைமுறிந்து விழுதல் போல
கண்மூடி சிலரிங்கே விழுகின் றார்கள் !

அற்புதமாய் வாய்த்திட்ட இயற்கை தன்னை
அழிக்காமல் மாசாக்கிக் கெடுத்தி டாமல்
குற்றங்கள் வன்முறையில் கொள்ளை யிட்டுக்
குவிக்காமல் நேர்வழியில் பொருளை யீட்டி
நற்பண்பில் வாழ்க்கையினை அமைத்துக் கொண்டால்
நடுவழியில் பயணம்தான் முடிந்தி டாமல்
உற்றதொரு புகழோடு ஞாலம் போற்ற
உயர்வாக வாழ்ந்திடலாம் இறந்த பின்பும் !

by Swathi   on 15 Oct 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
01-Mar-2019 13:44:17 நிஷா said : Report Abuse
இக்காலத்திற்கு ஏற்ற கருத்தான கவிதையைத் தந்தமைக்கு நன்றி ...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.