மகாராஷ்டிராவில் நடன விடுதிகள் வழக்கம் போல் செயல்படலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு உட்பட்ட மும்பை மாநகரத்தில் ஏராளமான நடன விடுதிகள் செயல்பட்டு வந்தன. நடன விடுதி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த விடுதிகளில் ஆபாச நடனங்கள் ஆடப்படுவதாக கூறி கடந்த 2005ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு தடைவிதித்தது. இந்த தடையை எதிர்த்து, நடன விடுதிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பதிலுக்கு மாநில அரசுசம் மனு தாக்கல் செய்தது. 345 நடன விடுதிகள் இயங்க மட்டுமே உரிமம் இருந்தபோதும் மாநிலம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்பட்டதாகவும் இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் ஆபாச நடனங்கள் நடப்பதாகவும் மகாராஷ்டிரா அரசு குற்றம் சாட்டியது. நடன விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 70,000 பெண்கள் நடன விடுதிகளில் நடனமாடி வந்ததாகவும் அரசின் உத்தரவால் அவர்கள் வேலை இழந்து விட்டதாகவும் இதில் பலர் தற்கொலை செய்து கொண்டதாக வும் தெரிவிக்கப்பட்டது. மக்களை மகிழ்விக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடத்துவது அனுமதிக்க கூடியதுதான் என்றும் கூறப்பட்டது.இதை விசாரித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி எஸ். எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட பெஞ்ச், உயர் நீதிமன்ற உத்தரவு சரிதான் என்று கூறி, நடன விடுதிகள் செயல்பட அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.
|