சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவது தலத்தின் சிறப்பு.கோயிலுக்கு வடக்கே
சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர், தீர்த்தப்பொய்கையில்
வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்! பங்குனி உத்திர
விழாவின்போது, சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள், திருவீதியுலாக்கள் என அமர்க்களப்படும் கோயில். இந்த நாளில், தீராத நோயால்
அவதிப்படுவோர் மற்றும் கடன் தொல்லையால் சிக்கித் தவிப்பவர்கள், வியாபாரத்தில் அதிகலாபம் கிடைக்கவேண்டும் என வேண்டுவோர் தங்களது
நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்வார்கள். அதேபோல், உதயகிரி நாதனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, 108 தீபமேற்றி வழிபட்டால், விரைவில்
திருமணத் தடைகள் நீங்கும்; கல்யாண வரம் கைகூடி வரும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்; கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சத்துடன்
வாழலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள். சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில்
சூரியக் கதிர்கள் விழுவதைத் தரிசிக்கலாம். இந்த நாளில் முருகப் பெருமானைத் தரிசிப்பது விசேஷம்! எனவே இந்த நாட்களில், ஈரோடு மாவட்டத்தின்
பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வர்
சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவது தலத்தின் சிறப்பு. கோயிலுக்கு வடக்கே சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர், தீர்த்தப்பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம் பங்குனி உத்திர விழாவின்போது, சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள், திருவீதியுலாக்கள் என அமர்க்களப்படும் கோயில்.
இந்த நாளில், தீராத நோயால் அவதிப்படுவோர் மற்றும் கடன் தொல்லையால் சிக்கித் தவிப்பவர்கள், வியாபாரத்தில் அதிகலாபம் கிடைக்கவேண்டும் என வேண்டுவோர் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்வார்கள். அதேபோல், உதயகிரி நாதனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, 108 தீபமேற்றி வழிபட்டால், விரைவில் திருமணத் தடைகள் நீங்கும், கல்யாண வரம் கைகூடி வரும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள், கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சத்துடன் வாழலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள். |