மகத்துவ மூலிகை மலை. 700 ஆண்டுகள் முன் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண்
குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, ""கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, மருந்து தருகிறேன்''. என்று கூறி
மறைந்தார்.அதே சமயத்தில் கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, "" திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள மூலிகையை வைத்து
கட்டினால் குணுமாகிவிடும்''. என்று கூறி மறைந்தார்.திவானும் இத்தலத்திற்கு வர அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட புண் இரண்டே நாளில்
குணமாகி விட்டது. இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக செப்பேடு
கூறுகிறது.இந்தக்கோயிலில் உள்ள தீபமங்கள ஜோதியின் வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் அழகிய திருமுடியையும், திருவதனத்தையும்,
திருவடியையும் காண "நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே' என்று மனமுருகி பாடியுள்ளார் அருணகிரிநாதர்.
மகத்துவ மூலிகை மலை. 700 ஆண்டுகள் முன் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண் குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, ""கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, மருந்து தருகிறேன்''. என்று கூறி மறைந்தார். அதே சமயத்தில் கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, "" திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள மூலிகையை வைத்து கட்டினால் குணுமாகிவிடும்''. என்று கூறி மறைந்தார்.
திவானும் இத்தலத்திற்கு வர அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட புண் இரண்டே நாளில் குணமாகி விட்டது. இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக செப்பேடு கூறுகிறது. இந்தக்கோயிலில் உள்ள தீபமங்கள ஜோதியின் வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் அழகிய திருமுடியையும், திருவதனத்தையும், திருவடியையும் காண "நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே' என்று மனமுருகி பாடியுள்ளார் அருணகிரிநாதர். |