LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

முதல் தனிமை ...

தனிமை

இனிமையென சிலர் சிரிப்பர்

கொடுமையென பலர் அழுவர்

ஆன்மீக அன்பர்கள்

சிரித்துக்கொண்டே அழுது

புதுமையென பதுமையாக நிற்பர்!

 

அன்றில் பறவைகள்போல்

இன்பமுடன் பறந்து

திரிந்த காதலர்கள்...

பிரிந்ததுமுதல் தனிமையில்

சிறகொடிந்த பறவைபோல்

துன்பத்தில் வீழ்ந்தனர் !

 

பள்ளி கல்லூரிச்சாலையில்

படித்துப் பழகி மகிழ்ந்த

பிரியாத மாணவ நண்பர்கள்

பிரிந்த நாள்முதல் தனிமையில்

திக்குத்தெரியாத காட்டில்

நிற்பதுபோல் தவித்து நின்றனர் !

 

திருமணம் முடிந்த

பாசமிகு பெண்மகள்

புகுந்த வீடு சென்ற நாள்முதல்

பாசத்துக்காக ஏங்கி

தனிமையில் தாய் தந்தை

தவித்து நின்றனர்!   

 

பரபரப்பான

பக்தர்கள் கூட்டத்தில்

அருள்வாக்கு அளித்த துறவி

இமயம் அடைந்த நாள்முதல்

தனிமையில் அமைதி உணர்ந்தார் !

 
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்.

by Subramanian   on 26 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.