LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

முத்தப்பருவம்

 

431 சுரும்பு செறியு நாண்பூட்டித் தோகைக் கருப்புச் சிலைகோட்டித்
      தோலா மதுகைத் திறங்காட்டிச் சுதைத்தேங் கணையொன் றுறக்கூட்டி
யரும்பு செருக்கிற் றொடுத்தான்மெய் யடலை புரிகண் ணுதற்பெருமா
      னங்கங் குளிர்ந்துள் ளுருகவவ னைந்துளொன்று விகசிக்க
விரும்பு மதனுண் மற்றொன்று விடமு மமுது மெழுவிக்க
      விழைமற் றொன்றை நகைமுகமா விண்ணோ ருணவும் விளர்த்திடுஞ்சொற்
கரும்பு கலந்து வெளிப்படுக்குங் கனிவாய் முத்தந் தருகவே
      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (1)
432 தோட்டு மலரா சனத்தமருந் தோன்றற் பிரமன் முதலாகச்
      சொற்ற வமரர் பெருங்குழுவுஞ் சொலுமற் றுளமன் பதைத்தொகையும்
வாட்டு முயிரென் றுண்ணடுங்கி வருந்தக் கனக னுடல்கீண்டு
      வருஞ்செந் நீருண் டுறுவெறியான் வருத்து மடங்க லுயிர்சாம்பப்
பாட்டு மறைவாழ்த் திடவெண்காற் பறவை யாய சகோரம்விழை
      பண்பிற் கவர்ந்து மகிழ்தூங்கப் பற்ப லுயிர்க்கு மின்பநலங்
காட்டு முறுவ னிலவரும்புங் கனிவாய் முத்தந் தருகவே
      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (2)
433 வண்ணக் குழவி வடிவாய்முன் மகிழ்ந்து கவர்ந்த காரணத்தால்
      வானம் பரவு மலையரசன் மனைவி மேனை முலைப்பாலுஞ்
சுண்ணப் பொடிசால் புயமலயத் துவசன் மனைவி பொன்மாலை
      துணைத்துப் பணைத்த முலைப்பாலுஞ் சுடர்வேற் குழவி தனையெடுத்து
நண்ணக் குளிர்முத் துண்டுவந்து நகுகா ரணத்தா லறுமாதர்
      நலங்கொண் முத்த முலைப்பாலு ஞான மயநின் முலைப்பாலுங்
கண்ணக் கலந்து பரிமளிக்குங் கனிவாய் முத்தந் தருகவே
      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (3)
434 ஆணத் திருக்கை யிவருளமென் றறைய நின்றா ரகங்கைநீ
      ராட்டி னார்பச் சிலையிட்டா ராத லான்மற் றிவரின்னே
மாணத் திருக்கை பயில்வேலா வலயப் புவிமன் னவராக
      வானோ ராக வரசாக மலரோ னாக மாலாக
வேணத் திருக்கை யொழித்தமர்வா ரிவர்சா லோக முதலியவைக்
      கிறைவ ராக விரைந்தருடி யெம்மா னேமற் றெல்லாருங்
காணத் திருக்கை சாத்தென்னுங் கனிவாய் முத்தந் தருகவே
      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (4)
435 மதிக்குஞ் சுவைத்தீம் பால்சுரந்து வடித்த கழைச்சா றுவட்டெடுத்து
      மதுரம் பொதிகோற் றேன்பொதிந்து மாறா தினிக்கும் பாகூறி
யுதிக்கு மணியா ழோசையளா யுவக்குங் குயிற்கூங் குரல்விரவி
      யுரைசெய் கிள்ளைக் கிளவிபயின் றுறுவேய்ங் குழலி னொலியமைந்து
திதிக்கு மொருமுக் கனிபழுத்துத் திகழும் புல்ல கண்டமுற்றுச் 
      செறிகற் கண்டு விளைந்தெழுந்து தெய்வங் கமழு மமிழ்தரும்பிக்
கதிக்குந் தமிழு மணந்துபொலி கனிவாய் முத்தந் தருகவே
      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (1)
வேறு
436 வண்பார் விரும்புங் கரும்புஞ் சுரும்புமிடை வாவிச் செழுங்கமலமும் -
      வானவ ரிருக்கையைத் தோயும்வே யும்புகல் வரம்பையி லரம்பையுமிகு,
நண்பார் பசுங்கமுகு நாடுபுகழ் செந்நெலு நலங்கூர் நினக்குநினது -
      நாதற்கு நீழலு மருச்சனைக் குபகரண நன்பொருளு மாகுமெனினுங்,
கண்பார் நினக்குமாற் றாளெனும் புனலுருக் காரிகையொ டளவளாவிக் -
      களிதூங்க லாலவை யுதித்தமுத் தங்கொளேங் கடவுள ரொருங்கவாவும்,
பண்பார் குடந்தைப் பெருந்திரு நகர்க்கரசி பவளமுத் தந்தருகவே -
      பரவுமந் திரபீடம் விரவுமங் களவல்லி பவளமுத் தந்தருகவே. (6)
437 காராய் கருங்கடற் குட்டம்வட வைத்தீக் கலப்பின்வெப் புற்றதின்னுங் -
      கழியா வுவர்ப்பும் புலாலுஞ் செறிந்ததக் கடைபடு கடற்குட்டமே,
யோரா யெனக்கொண் டுதித்தவளை யிப்பிநெட் டுடலவன் மீனமீன -
      முவையாதி தருமுத்த மெவ்வுயர்வை யுற்றதெவ் வுவகையை யெமக்காக்கிடும்,
போராய் மருப்புப் பொருப்பெறுழி வெங்கான் பொருந்தியுழல் கின்றதிறனாற் -
      புகர்பட்ட வன்னவை யுறுப்பின்முத் தங்களுமொர் பொருளென மதித்தல்செய்யேம்,
பாராய் குடந்தைப் பெருந்திரு நகர்க்கரசி பவளமுத் தந்தருகவே -
      பரவுமந் திரபீடம் விரவுமங் களவல்லி பவளமுத் தந்தருகவே. (7)
438 நீடுஞ் சிறப்பிற் பொலிந்தவவி முத்தமிகு நேயத் தளித்தபோது -
      நிகழதனி னுங்கோடி பங்கதிக மாயென்று நிலவுமித் தலமுத்தமுற்,
கூடுந் தவத்திற் கிடைத்தமரும் யாங்களது கொள்ளேம் விரும்பியதுவே -
      கொடுத்தருள னின்றிரு வருட்கழகு நெக்குருகு கொள்கையரு ளக்கோயில்கொண்,
டாடும்பிரா னொடுமமர்ந் தருள்விளக்கே யலங்குமறை முடியென்னுமோ -
      ராவியினுலாவு பெடை யன்னமே முன்னரு மனைத்துநூ லுந்தெரிந்தோர், பாடுங் குடந்தைத் திருப்பெரு நகர்க்கரசி பவளமுத் தந்தருகவே -
      பரவுமந் திரபீடம் விரவுமங் களவல்லி பவளமுத் தந்தருகவே. (8)
வேறு
439 நன்று கருது மன்ப ரிதய கஞ்ச மருவு சத்தியே
      நம்பு மறையி னும்ப ரிலகு துங்க விமல தத்தையே
கன்று பிறவி நந்து திருவர் சிந்தை குலவு வித்தையே
      கந்தர் தருவி னைங்கை முதல்வர் மைந்த ரெனவ ணைத்துளா
யொன்று புகலி யந்தண் மழவு முந்த வருள்ப யத்தியே
      யும்ப லிறைமு னந்து சுரர்கண் முந்து தொழுப தத்தியே
குன்று மகிழ வந்த கருணை யம்பை தருக முத்தமே
      கும்ப முதல்வர் பங்கி னமரு மங்கை தருக முத்தமே. (9)
440 கரிய முகிலி னளக மிருள்செய் கவுரி தருக முத்தமே
      கருதி யுருகு மடிய ரிதய கமலை தருக முத்தமே
யரிய கருணை பொழியு நயன வமலை தருக முத்தமே
      யழகு பொழியும் வதன பதும வபினை தருக முத்தமே
புரிய வினிய விமய முதவு புதல்வி தருக முத்தமே
      பொருவில் கருணை யுருவ மருவு புனிதை தருக முத்தமே
துரிய முடிவில் வெளியின் மருவு சுமுகி தருக முத்தமே
      சுவைய வமுத கலச முதல்வர் துணைவி தருக முத்தமே. (10)

 

431 சுரும்பு செறியு நாண்பூட்டித் தோகைக் கருப்புச் சிலைகோட்டித்

      தோலா மதுகைத் திறங்காட்டிச் சுதைத்தேங் கணையொன் றுறக்கூட்டி

யரும்பு செருக்கிற் றொடுத்தான்மெய் யடலை புரிகண் ணுதற்பெருமா

      னங்கங் குளிர்ந்துள் ளுருகவவ னைந்துளொன்று விகசிக்க

விரும்பு மதனுண் மற்றொன்று விடமு மமுது மெழுவிக்க

      விழைமற் றொன்றை நகைமுகமா விண்ணோ ருணவும் விளர்த்திடுஞ்சொற்

கரும்பு கலந்து வெளிப்படுக்குங் கனிவாய் முத்தந் தருகவே

      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (1)

 

432 தோட்டு மலரா சனத்தமருந் தோன்றற் பிரமன் முதலாகச்

      சொற்ற வமரர் பெருங்குழுவுஞ் சொலுமற் றுளமன் பதைத்தொகையும்

வாட்டு முயிரென் றுண்ணடுங்கி வருந்தக் கனக னுடல்கீண்டு

      வருஞ்செந் நீருண் டுறுவெறியான் வருத்து மடங்க லுயிர்சாம்பப்

பாட்டு மறைவாழ்த் திடவெண்காற் பறவை யாய சகோரம்விழை

      பண்பிற் கவர்ந்து மகிழ்தூங்கப் பற்ப லுயிர்க்கு மின்பநலங்

காட்டு முறுவ னிலவரும்புங் கனிவாய் முத்தந் தருகவே

      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (2)

 

433 வண்ணக் குழவி வடிவாய்முன் மகிழ்ந்து கவர்ந்த காரணத்தால்

      வானம் பரவு மலையரசன் மனைவி மேனை முலைப்பாலுஞ்

சுண்ணப் பொடிசால் புயமலயத் துவசன் மனைவி பொன்மாலை

      துணைத்துப் பணைத்த முலைப்பாலுஞ் சுடர்வேற் குழவி தனையெடுத்து

நண்ணக் குளிர்முத் துண்டுவந்து நகுகா ரணத்தா லறுமாதர்

      நலங்கொண் முத்த முலைப்பாலு ஞான மயநின் முலைப்பாலுங்

கண்ணக் கலந்து பரிமளிக்குங் கனிவாய் முத்தந் தருகவே

      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (3)

 

434 ஆணத் திருக்கை யிவருளமென் றறைய நின்றா ரகங்கைநீ

      ராட்டி னார்பச் சிலையிட்டா ராத லான்மற் றிவரின்னே

மாணத் திருக்கை பயில்வேலா வலயப் புவிமன் னவராக

      வானோ ராக வரசாக மலரோ னாக மாலாக

வேணத் திருக்கை யொழித்தமர்வா ரிவர்சா லோக முதலியவைக்

      கிறைவ ராக விரைந்தருடி யெம்மா னேமற் றெல்லாருங்

காணத் திருக்கை சாத்தென்னுங் கனிவாய் முத்தந் தருகவே

      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (4)

 

435 மதிக்குஞ் சுவைத்தீம் பால்சுரந்து வடித்த கழைச்சா றுவட்டெடுத்து

      மதுரம் பொதிகோற் றேன்பொதிந்து மாறா தினிக்கும் பாகூறி

யுதிக்கு மணியா ழோசையளா யுவக்குங் குயிற்கூங் குரல்விரவி

      யுரைசெய் கிள்ளைக் கிளவிபயின் றுறுவேய்ங் குழலி னொலியமைந்து

திதிக்கு மொருமுக் கனிபழுத்துத் திகழும் புல்ல கண்டமுற்றுச் 

      செறிகற் கண்டு விளைந்தெழுந்து தெய்வங் கமழு மமிழ்தரும்பிக்

கதிக்குந் தமிழு மணந்துபொலி கனிவாய் முத்தந் தருகவே

      கருணா கரமங் களவல்லி கனிவாய் முத்தந் தருகவே. (1)

 

வேறு

436 வண்பார் விரும்புங் கரும்புஞ் சுரும்புமிடை வாவிச் செழுங்கமலமும் -

      வானவ ரிருக்கையைத் தோயும்வே யும்புகல் வரம்பையி லரம்பையுமிகு,

நண்பார் பசுங்கமுகு நாடுபுகழ் செந்நெலு நலங்கூர் நினக்குநினது -

      நாதற்கு நீழலு மருச்சனைக் குபகரண நன்பொருளு மாகுமெனினுங்,

கண்பார் நினக்குமாற் றாளெனும் புனலுருக் காரிகையொ டளவளாவிக் -

      களிதூங்க லாலவை யுதித்தமுத் தங்கொளேங் கடவுள ரொருங்கவாவும்,

பண்பார் குடந்தைப் பெருந்திரு நகர்க்கரசி பவளமுத் தந்தருகவே -

      பரவுமந் திரபீடம் விரவுமங் களவல்லி பவளமுத் தந்தருகவே. (6)

 

437 காராய் கருங்கடற் குட்டம்வட வைத்தீக் கலப்பின்வெப் புற்றதின்னுங் -

      கழியா வுவர்ப்பும் புலாலுஞ் செறிந்ததக் கடைபடு கடற்குட்டமே,

யோரா யெனக்கொண் டுதித்தவளை யிப்பிநெட் டுடலவன் மீனமீன -

      முவையாதி தருமுத்த மெவ்வுயர்வை யுற்றதெவ் வுவகையை யெமக்காக்கிடும்,

போராய் மருப்புப் பொருப்பெறுழி வெங்கான் பொருந்தியுழல் கின்றதிறனாற் -

      புகர்பட்ட வன்னவை யுறுப்பின்முத் தங்களுமொர் பொருளென மதித்தல்செய்யேம்,

பாராய் குடந்தைப் பெருந்திரு நகர்க்கரசி பவளமுத் தந்தருகவே -

      பரவுமந் திரபீடம் விரவுமங் களவல்லி பவளமுத் தந்தருகவே. (7)

 

438 நீடுஞ் சிறப்பிற் பொலிந்தவவி முத்தமிகு நேயத் தளித்தபோது -

      நிகழதனி னுங்கோடி பங்கதிக மாயென்று நிலவுமித் தலமுத்தமுற்,

கூடுந் தவத்திற் கிடைத்தமரும் யாங்களது கொள்ளேம் விரும்பியதுவே -

      கொடுத்தருள னின்றிரு வருட்கழகு நெக்குருகு கொள்கையரு ளக்கோயில்கொண்,

டாடும்பிரா னொடுமமர்ந் தருள்விளக்கே யலங்குமறை முடியென்னுமோ -

      ராவியினுலாவு பெடை யன்னமே முன்னரு மனைத்துநூ லுந்தெரிந்தோர், பாடுங் குடந்தைத் திருப்பெரு நகர்க்கரசி பவளமுத் தந்தருகவே -

      பரவுமந் திரபீடம் விரவுமங் களவல்லி பவளமுத் தந்தருகவே. (8)

 

வேறு

439 நன்று கருது மன்ப ரிதய கஞ்ச மருவு சத்தியே

      நம்பு மறையி னும்ப ரிலகு துங்க விமல தத்தையே

கன்று பிறவி நந்து திருவர் சிந்தை குலவு வித்தையே

      கந்தர் தருவி னைங்கை முதல்வர் மைந்த ரெனவ ணைத்துளா

யொன்று புகலி யந்தண் மழவு முந்த வருள்ப யத்தியே

      யும்ப லிறைமு னந்து சுரர்கண் முந்து தொழுப தத்தியே

குன்று மகிழ வந்த கருணை யம்பை தருக முத்தமே

      கும்ப முதல்வர் பங்கி னமரு மங்கை தருக முத்தமே. (9)

 

440 கரிய முகிலி னளக மிருள்செய் கவுரி தருக முத்தமே

      கருதி யுருகு மடிய ரிதய கமலை தருக முத்தமே

யரிய கருணை பொழியு நயன வமலை தருக முத்தமே

      யழகு பொழியும் வதன பதும வபினை தருக முத்தமே

புரிய வினிய விமய முதவு புதல்வி தருக முத்தமே

      பொருவில் கருணை யுருவ மருவு புனிதை தருக முத்தமே

துரிய முடிவில் வெளியின் மருவு சுமுகி தருக முத்தமே

      சுவைய வமுத கலச முதல்வர் துணைவி தருக முத்தமே. (10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.