இங்குள்ள "உறங்காப்புளி' எனப்படும் புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்கே கருப்பசுவாமி அமர்ந்த
நிலையில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலைகளுக்கு நடுவில் ஒருபுறம் ஆஞ்சநேயரும், மறுபுறம்
கருடனும் காவல் செய்கின்றனர். தேவதாசி ஒருத்தி நடனமாடும் சிலையும், வானரப்படைகளின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது. பார்வதியின் தந்தை தட்சன்,
பிராஜன் என்ற பெயரில் ஆடுமுகம் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். துந்துபி எனப்படும் மாடு முகம் கொண்ட இசைக்கலைஞர் இங்கு உள்ளார். இவரது
மனைவி துந்துமி, முன்னோடியின் சன்னதியின் முன்பு காட்சி தருகிறாள். இங்கு முத்திலே பிறந்து, முத்திலே வளர்ந்த ஆறுகரம் கொண்ட முத்துராக்கு அம்மனும்
அருள்பாலிக்கிறாள். இவளுக்கு சூல் ஆடு குத்தி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பீடைகள், தீவினைகள், தோஷங்கள்
பறந்தோடி விடும். அமர்ந்த நிலையிலுள்ள கருப்பசுவாமியை காண்பது அரிது.இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அவரருகே ஆஞ்சநேயர்
காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஏகம்மன், அரசப்பன், சஞ்சீவி பண்டாரம் ஆகியோருடன் மூலவராக அருள்பாலிப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன்.
இங்குள்ள "உறங்காப்புளி' எனப்படும் புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலைகளுக்கு நடுவில் ஒருபுறம் ஆஞ்சநேயரும், மறுபுறம் கருடனும் காவல் செய்கின்றனர். தேவதாசி ஒருத்தி நடனமாடும் சிலையும், வானரப்படைகளின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது.
பார்வதியின் தந்தை தட்சன், பிராஜன் என்ற பெயரில் ஆடுமுகம் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். துந்துபி எனப்படும் மாடு முகம் கொண்ட இசைக்கலைஞர் இங்கு உள்ளார். இவரது மனைவி துந்துமி, முன்னோடியின் சன்னதியின் முன்பு காட்சி தருகிறாள். இங்கு முத்திலே பிறந்து, முத்திலே வளர்ந்த ஆறுகரம் கொண்ட முத்துராக்கு அம்மனும் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு சூல் ஆடு குத்தி வழிபாடு நடக்கிறது.
இங்குள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பீடைகள், தீவினைகள், தோஷங்கள் பறந்தோடி விடும். அமர்ந்த நிலையிலுள்ள கருப்பசுவாமியை காண்பது அரிது.இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அவரருகே ஆஞ்சநேயர் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஏகம்மன், அரசப்பன், சஞ்சீவி பண்டாரம் ஆகியோருடன் மூலவராக அருள்பாலிப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன். |