பீட வடிவில் சுவாமி. நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. ஆதி
காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுவாமி பள்ளத்திற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பீடத்திற்கு
சந்தனத்தில் கண், மூக்கு, நெற்றிப்பொட்டு வைத்து சுவாமி போல அலங்கரிக்கிறார்கள். தலைப் பாகையினை இதற்கு மேலேயே கட்டுகின்றனர். இவரிடம்
கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த
கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களை கோயிலில் இருந்து அகற்றப்படுவது கிடையாது. கோயில்
வளாகத்திலேயே வைத்துவிடுகின்றனர். இவை சுவாமிக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்களாக கருதப்படுவதால், யாரும் பயத்தால் எடுப்பதில்லை.
இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் கருப்பசாமி பீடம் இருக்கிறது.நாவலடி கருப்ப சாமியிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறி யவர்கள், இந்த
பீடத்தில் கிடா மற்றும் சேவலை நேர்த்திக்கடன் செலுத்து கிறார்கள். கருப்பசாமி கோயிலுக்கு எதிரே வெளியில் உள்ள அரசமரத்தில் செருப்பு காணிக்கை
செலுத்தும் வழக்கமும் இருக்கிறது.
பீட வடிவில் சுவாமி. நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. ஆதி காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுவாமி பள்ளத்திற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பீடத்திற்கு சந்தனத்தில் கண், மூக்கு, நெற்றிப்பொட்டு வைத்து சுவாமி போல அலங்கரிக்கிறார்கள். தலைப் பாகையினை இதற்கு மேலேயே கட்டுகின்றனர்.
இவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களை கோயிலில் இருந்து அகற்றப்படுவது கிடையாது. கோயில் வளாகத்திலேயே வைத்துவிடுகின்றனர்.
இவை சுவாமிக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்களாக கருதப்படுவதால், யாரும் பயத்தால் எடுப்பதில்லை. இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் கருப்பசாமி பீடம் இருக்கிறது.நாவலடி கருப்ப சாமியிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறி யவர்கள், இந்த பீடத்தில் கிடா மற்றும் சேவலை நேர்த்திக்கடன் செலுத்து கிறார்கள். கருப்பசாமி கோயிலுக்கு எதிரே வெளியில் உள்ள அரசமரத்தில் செருப்பு காணிக்கை செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. |